!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, December 30, 2013

டெல்லி: என்ன செய்யலாம்?


photo-india today

டெல்லியில் ஒருவழியாக ஆம் ஆத்மி பார்ட்டி அதிகாரத்துக்கு வந்துவிட்டது. யாரை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்களோ அவர்களின் ஆதரவிலேயே ஆட்சி! விதி வலியது என்று சொல்வார்களே, அது இதுதானா!

இருந்தாலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் யாரையும் குறை சொல்ல முடியாது. எரிகிற கொள்ளியில் எது பரவாயில்லை என்று மக்கள் தேர்தலில் முடிவெடுக்கிறார்கள். அதேபோல், எந்த முடிவெடுத்தாலும் அது முரண்பாடாக போய் முடியும் நிலையில், அரசியல்கட்சிகளுக்கும் வேறு வழியில்லை. `பரவாயில்லை` என்ற முடிவை எடுக்க வேண்டியதுதான். அரவிந்த் கேஜ்ரிவாலின் முடிவு அந்தவகைதான்.

Tuesday, December 17, 2013

மிஷ்கின் ஃபிலிம் காட்டறார்

மாரியம்மன் கோவில்--Indian express  

இங்கே அட்கேஷ்வர் என்ற ஏரியாவில் உள்ளூர் காவலரும் உலக காவலரும் அருகருகே இருக்கிறார்கள். அதாவது இந்த பக்கம் போலீஸ், அந்த பக்கம் கடவுள் (அட்கேஷ்வர்).

ஒருமுறை டூ வீலரில் வந்தவர்கள் வண்டியை விட்டு இறங்கி போலீசாரிடம் லைசன்ஸ் மற்றும் மற்ற இத்யாதிகளை பவ்யமாக காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த காட்சியை பார்த்துக் கொண்டே நான் நடந்து வந்து கொண்டிருந்தேன். கோவிலுக்கு அருகில் வந்தபோது, அங்கே ஒருவர் டூ வீலர் வண்டியில் உட்கார்ந்துகொண்டே கோவிலை (சாமியை) பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருந்தார். பெட்டிஷன் நிறைய இருக்கும் போலிருக்கிறது.  நான் அதை தாண்டி கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தபோதும் முணுமுணுப்புதான். இவ்வளோ பெட்டிஷன் வைச்சிருக்கிறவர் அதை உள்ள போய் முறையா சொல்ல வேண்டியதுதானே?

Wednesday, December 11, 2013

மூன்று விஷயங்கள்


பதிவு எழுதி ரொம்ப நாளாகிவிட்டது. காரணத்தை சொன்னால் அது புலம்பலில் போய் முடியும். எனவே அது வேண்டாம். நேரடியாகவே பதிவுக்கு போய்விடுவோம்.

லைப்ரரி

இங்கே (அகமதாபாத்) வந்து ஓராண்டு முடிந்த பிறகுதான் லைப்ரரியை தேட ஆரம்பித்தேன். நேரத்தை கொலை செய்ய வேண்டுமே, அதுதான் காரணம். மனிதர்களுடன் பழகமுடியவில்லை. அரை மணி நேரம் பேசினால் 6 கேள்விகள் கேட்கிறார்கள். அதில் 5 கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. புத்தகம்தான் நல்ல துணையாக இருக்கிறது. இணையம் கண் வலியை கொடுப்பதால், லைப்ரரிதான் சரி என அதை தேட ஆரம்பித்தேன்.

Monday, April 8, 2013

இதைப் பற்றி நாம் பேசக்கூடாது


நாட்டை உலுக்கிய டெல்லி கற்பழிப்புக்கு பின்னர் செய்திகளை தொடர்ந்து கவனித்து வந்தால், அது பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்ததாக தெரியவில்லை.

தினம் ஒரு தகவல் என ஏதாவது ஒரு ஒரு கற்பழிப்பு செய்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்பால் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. அதிலும் பெண்கள் இந்தியா என்றாலே அலறுகிறார்கலாம். சமீபத்திய புள்ளிவிவரம் அப்படி சொல்கிறது. இதனால் நமக்கு அன்னிய செலாவணியும் போச்சு, மானம் மரியாதையும் போச்சு. 

சட்டம் இந்த குற்றங்களுக்கு கடுமையை காட்டுவதில்லை என்பது ஒரு முக்கிய குறையாக சொல்லப்பட்டது. அரசு தற்போது சட்டங்களை கடுமையாகி இருப்பதால், அந்த ஓட்டையை அடைத்தாகிவிட்டது என்றே நினைப்போம்.

Tuesday, March 26, 2013

இலங்கை: இங்கேயும், அங்கேயும்


தமிழில் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு ஆங்கில இணையதளத்தில் கருத்து சொல்வதை நிறுத்திக் கொண்டேன்.  நமக்கு சரிவராத ஒரு மொழியில் எதற்கு  கஷ்டப்பட்டு கருத்து சொல்லணும் என்பதால் அதில் ஆர்வம் குறைந்தது. ஆனால் இலங்கை பிரச்சினை குறித்த கருத்துக்களை வட இந்திய ஊடகங்களில் படித்தபோது அப்படி இருக்க முடியவில்லை.

பல  வட இந்தியர்கள், `தமிழர்களுக்கு அங்கே மரியாதை இல்லையென்றால் விசாவை முடித்துக் கொண்டு திரும்ப வேண்டியதுதானே` என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழர்களின் பிரச்சினைகளை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

Monday, March 18, 2013

பத்திரிகையாளர்களே...நல்லா பாத்துக்குங்க...


இந்தியாவில் பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமில்லை. நானும் அதில் சிலவற்றை குறிப்பெடுத்துக் கொண்டு எழுத முயற்சிப்பதுண்டு. ஆனால் அது குறித்து மேலும் படிக்க ஆரம்பிப்பதிலும், பின்னர் எண்ணங்களை பதிவாக மாற்றி செம்மைபடுத்துவதிலும் நேரம் போய்விடுகிறது. அதனால், தமிழ்நாட்டில் ஏதோ ஒரு பிரச்சினை பற்றி எரியும் போது நான் வேறு ஏதோ ஒன்றை பற்றி எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க கூடாது.

இது கடந்த வாரம் நான் கவனித்த செய்திகள்   

ஷேர் மார்கெட் நிறைய நம்பிக்கையையும் கனவுகளையும் காட்டியபோது நான் எதிர்காலம் குறித்து திட்டமிட ஆரம்பித்தேன். 

இப்படி திட்டமிடும் நேரத்தில் கல்யாண ஆசை மறைந்து, அரசியல் ஆசை தலைதூக்க ஆரம்பித்தது.பணம் என்னை  அங்கே  கொண்டு செல்லுமானால், மக்களிடம், `இதபாருங்க, எனக்கு ஷேர் மார்கெட்ல பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. அதனால தைரியமா எனக்கு ஓட்டு போடுங்க. நான் ஊழல் பண்ணமாட்டேன்` என்றும்,  கட்சிக்காரர்களிடம், `எனக்கு (நேரடி) உறவுகள் எதுவும் கிடையாது. திருமணமும் செய்யமாட்டேன். அதனால் வாரிசு பிரச்சினைகள் வராது` என்றும் உத்தரவாதம் கொடுப்பது என்று முடிவு செய்தேன்.

Monday, March 11, 2013

ரயில்வே: இப்படியும் அப்படியும்

கடந்த சில மாதமாக எழுத முடியவில்லை. ஒரு உறவினருக்கு உதவியாக ஆஸ்பிடல் போகும் வேலை வர, பதிவுகள் தடைபட்டது. பின்னர் வழக்கமாக அவ்வப்போது வரும் மனச்சோர்வு ஆட்கொள்ள, பதிவுகள் நின்றுவிட்டது. அதன்பிறகு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது ரயில்வே துறை குறித்த ஒரு விவாதத்தை கவனித்தபோதுதான்.

இதை சன் நியுஸில் கவனித்தேன். ரயில்வே துறை லாபகரமாக நடக்கிறது; (கடந்த காலங்களில்) 10,000௦௦௦௦௦ கோடி லாபம் பார்த்திருக்கிறது; அரசுக்கு டிவிடெண்டாக அது கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒருவர் சொன்னார்.

லாபம்?

வழக்கம் போல் இது அரைகுறை புள்ளி விவரம். லாபம் என்றால் என்ன, அதை எப்படி கணக்கிட வேண்டும் என்று வரைமுறை இல்லாமல் மேம்போக்காக சொல்லப்படுபவை.

Thursday, January 10, 2013

போலீசின் `எல்லை`


எனக்கு மொபைலில் ஒரு மெசேஜ் வந்துது. வழியில் எங்கேயாவது பறவைகள் அடிபட்டு கிடந்தால், உடனே எங்களுக்கு போன் பண்ணுங்க என்று. இங்கே குஜராத்தில் இந்த மாதம் காத்தாடி திருவிழா என்பதால் பறவைகள் அடிபடும் வாய்ப்பு அதிகம். எனவே இந்த கவலை.

ஆனால் எனக்கு டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம்தான் ஞாபகத்துக்கு வந்தது. அங்கே அந்த பெண்ணும், அவர் நண்பரும் ரோட்டில் விழுந்து கிடந்த போது, பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டு போனார்களாம். உடனடியாக முதலுதவி கொடுக்க வேண்டும் என்றோ அல்லது குறைந்த பட்சம் அவர்களுக்கு உடை கொடுக்க வேண்டும் என்றோ யாருக்கும் தோன்றவில்லை.

Friday, January 4, 2013

பதிவு எழுதுவதால் வந்த தலைவலி


பக்க விளைவுகள். சமீபகாலமாக நான் அதிகம் கவலைப்படுவது இதைப் பற்றித்தான். ஏதாவது ஒரு செயலில் நாம் இறங்கி அதில் தோற்றுப்போய் தலை முழுகினாலும், விட்ட குறை தொட்ட குறை என சில விஷயங்களாய் அது நம்மை தொடரும். தற்போது எனக்கு வந்திருக்கும் தலைவலிகள் அந்த வகை. 

ஷேர் மார்கெட் 

ஆரம்பகாலத்தில் ஷேர்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தபோது பல உபதேசங்கள் கிடைத்தது. `ஏதாவது இடத்தை வாங்கிப் போடுங்க, பின்னால நல்ல விலை போகும்` என்பது அதில் ஓன்று.

ஆனால் அப்போது நான் ஷேர் மார்க்கெட்டில் ருசி கண்டுவிட்டேன். அந்த சமயம் square d software என்ற ஷேர் புது வெளியீடாக வந்தது. நான் 300௦௦ ஷேர் விண்ணப்பிக்க 300ம் கிடைத்து.