!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, September 30, 2012

அமெரிக்கா -இந்தியா-ஜப்பான். இது அரசியல் கூட்டணி அல்ல

அமெரிக்கா

சமீபத்தில் வாஷிங்டன் போஸ்டில் ஒரு கட்டுரை படித்தேன். இந்தியா மீது நம்பிக்கை இழக்காதீர்கள் என்று தலைப்பு. கட்டுரையாளர் இந்தியா மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்.

சமீபகாலமாக இந்தியா பொருளாதாரரீதியாக தடுமாறுகிறது. தினம் ஒரு ஊழல் என வெளிப்படுகிறது. அரசு முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது. இதையெல்லாம் தாண்டி 2030 ல் இந்தியாவும் பேசப்படும் என்று எழுதி இருக்கிறார். தற்போது சீனா எப்படி பேசப்படுகிறதோ அதேபோல் இந்தியாவும் பேசப்படுமாம்.

Monday, September 17, 2012

கூடங்குளம்: திரிக்கப்பட்ட உண்மைகள்

கூடங்குளம் மீண்டும் பரபரப்பாகிவிட்டது. இது குறித்து சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். இருந்தாலும் செய்திகளில் சிலவற்றை மட்டுமே உண்மையாக இதன் எதிர்பாளர்கள் பரப்புரை செய்யும்போது, அதற்கு பதில் எழுத வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது.

அணுஉலை விற்கும் நாடுகள் தங்களுக்கு ஒரு கொள்கை மற்றவர்களுக்கு ஒரு கொள்கை என ஓரவஞ்சனை  செய்யவில்லை. எந்த ரிஸ்கை அவர்கள்  எடுக்கிறார்களோ அதேதான் நமக்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தை நாட்டின் முன்னணி கட்சிகள் அனைத்தும் ஆதரிக்கின்றன. எனவே நாடு இந்த யதார்த்தமான பாதையிலிருந்து விலக முடியாது.

Thursday, September 6, 2012

ராஜீவ் கொலையாளிகள் மன்னிக்கப்படுவார்கள்?


மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. அவ்வவப்போது இதற்கான குரல் கேட்டாலும் தற்போது அது சத்தமாக ஒலிக்கிறது.

இந்த விஷயத்தில் நான் என் கருத்தை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பேரறிவாளனை இதுவரை அனுபவித்த தண்டனையோடு விடுதலை செய்வதையும், மற்ற இருவருக்கும் ஆயுள்தண்டனை வழங்குவதையும் நான் ஆதரிக்கிறேன்.

Sunday, September 2, 2012

சிறை அனுபவம்: இப்படியெல்லாம் நாங்கள் பேப்பர் படித்தோம்

சிறைக்கு சென்றபின் முதல் முறையாக இது கஷ்டம் என நான் உணர்ந்தது பேப்பர் படிக்கும் விஷயத்தில்தான். வெளியே இருந்தபோது நான் படிக்கும் நேரம்தான் அதிகம். மினி லைப்ரரி வைத்திருந்ததால், தினம் சில வாரஇதழ்கள் வந்துவிடும். அதை சர்குலஷன் விடும்முன் நான் முதலில் மேய்ந்துவிடுவேன். வியாபாரம் அப்புறம்தான். (பெரும்பாலும் வியாபாரத்தை கவனிப்பது ஊழியர்கள்தான்.) 

அந்த வேலை முடிந்ததும் மதியம் இணையத்தில் உலக பத்திரிகைகளை மேய்வேன். இரவு அரைமணி நேரம் ஆங்கில நாவலுக்காக.. நாவல் மோகம் கிடையாது. தொடர்ந்து படித்தால் ஆங்கிலம் வசப்பட்டுவிடும் என்பதால் அதையும் விடுவதில்லை. இப்படி தினம் பல மணி நேரம் படித்தே பழகிய நான், சிறையில் இந்த ஒரு விஷயத்தில்தான் நொந்துபோனேன்.