!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, June 24, 2012

இது விஷப் பரிட்சை

இந்த வாரம் `புதிய தலைமுறை`டிவியில் விவாதம் ஒன்றை கவனித்தேன். தமிழருவி மணியன் சில கருத்துக்களை முன் வைத்தார். பிரதமர், முதல்வர் போன்றவர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார்.

நல்ல கருத்து. ஆனால் எல்லோருக்கும் பொருந்துமா? ஒரே மொழி ஒரு நாட்டை இணைக்கவேண்டும். அப்படிப்பட்ட நாடுகளில்தான் இது நல்ல முறையாக இருக்கும். இந்தியாவிற்கு இது தலைவலிதான்.

இங்கே மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே மாநில அளவில் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், போட்டி போடுபவர்கள் அனைவரும் ஒரே மொழியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பார்கள்.

Sunday, June 17, 2012

தனியாருக்கு லாபம். ஆனால் அரசுக்கு நஷ்டமில்லை

கடந்த பதிவில் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை மற்றும் பெட்ரோல் விலை உயர்வுக்கு, பிரணாப் முகர்ஜி பிரமோஷன் இல்லாமல் மந்தநிலைக்கு வந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கும் என்று எழுதி இருந்தேன். இப்போது அந்த வியாதி என்னையும் தாக்கிவிட்டது.

எப்படியாவது வாரம் பதிவு போடவேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் குறைந்துவிட்டது. தீர்வுகள் இல்லாமல், இலக்குகள் இல்லாமல் ஒரு வாழ்கை என்ற நிலையில், டிப்ரசிவ் நோய் மீண்டும் தாக்கி இருக்கிறது. அத்துடன் சனிபெயர்ச்சி என்று சொல்வார்களே அதேபோல் அவ்வப்போது இடபெயர்ச்சி என்பதும் என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

Saturday, June 2, 2012

கடைசியாக ஒரு வீடு

பெட்ரோல் விலைதான் தற்போதைய பிரச்சினை. சர்வதேச சந்தையில் விலை ஏறுகிறதாம். இது ஒரு காரணம். அடுத்த காரணம் ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது. முதலாவது சர்வதேச நிலை. அது நம் கையில் இல்லை. இரண்டாவது நிச்சயம் இந்த அரசின் திறமையின்மையை காட்டுகிறது.

இங்கே விமர்சிக்கப் படவேண்டியவர் பிரணாப் முகர்ஜிதான். கூட்டணி நிர்பந்தம், பாப்புலர் அரசியல் என சில விஷயங்கள் முடிவெடுப்பதை பாதித்தாலும், இவருடைய நிர்வாகத் திறமை தற்போது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. 

இருந்தாலும் அனுபவசாலியான அவரிடம் திறமை இல்லை என்று சொல்லமுடியுமா? ஒருவேளை மந்தமாகிவிட்டாரா? அதற்கு ஒரு காரணம் தெரிகிறது. இந்தியாவின் வளர்ச்சியை விட அவருடைய அரசியல் வளர்ச்சி படு மந்தமாக இருக்கிறது. அது ஏற்படுத்திய பாதிப்பாகவும் இருக்கலாம்.