!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, December 28, 2012

சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்கால் பணம்


கிரானைட் வழக்கில் கைது செய்யப்பட்ட பி ஆர் பழனிச்சாமி அனைத்து வழக்குகளிலும் பெயில் கிடைத்து வெளியில் வந்துவிட்டாராம். இது சமீபத்தில் படித்த செய்தி. இவர் மீது 35 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இன்னும் வரக்கூடுமாம்.

பொதுவாக ஒருவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தால் அவர்களுக்கு பெயில் கொடுக்கக் கூடாது என்பதுதான் என் கருத்து. இதை வலியுறுத்தி ஒரு பதிவும் போட்டிருக்கிறேன். ஐந்துக்கு மேல் போனால் காப்பு உறுதி என்ற பயம் ஓரளவுக்காவது குற்றவாளிகளை கட்டுபடுத்தும்.

Friday, December 21, 2012

மன்னிக்க அல்ல, தண்டிக்க கற்றுக் கொள்ளுங்கள்


டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், இந்த சமுதாயம் எந்த அளவுக்கு மோசமாக மாறிவிட்டது என்பதை காட்டுகிறது. வழக்கம்போல் கூச்சல்களும் மெழுகுவர்த்தி ஊர்வலங்களும் நடக்கும்.

அடுத்து குஜராத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக அலசப்படும் போது, இந்த விஷயம் மறக்கடிக்கப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அந்த நேரம் உணர்சிகளை கொட்டிவிட்டு பின்னர் அதை மறந்துவிடுவது இந்தியர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

எனக்கு தெரிந்து இந்த பிரச்சினைகளுக்கு இரண்டே காரணங்கள்தான். ஓன்று மக்களின் மனநிலை, மற்றது இந்திய நீதித்துறையின் உருப்படாத கொள்கை.

Saturday, December 15, 2012

நகர்வலம்: எப்படி எல்லாம் நம்பள ஏமாத்தறாங்க!


தினம் செய்திகளை இணையத்திலும், டிவியிலும் கேட்டாலும், தமிழ் நாட்டின் அடுத்த கட்ட செய்திகள் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதாவது பரபரப்பான செய்தி தலைப்பு செய்தியாகிவிடும். ஆனால் அதையும் தாண்டி பல செய்திகள் இருக்கும். அது கவனத்துக்கு வராமலேயே போகிவிடும்.

எனவே மற்ற செய்திகளையும் கவனிக்க ஜூவி வாங்கப் போனேன். சில வாரங்களாக வாங்கவில்லை. அங்கே 9 ம் தேதி போட்ட இதழ் எனக்கு 14 ந்தேதி கிடைத்தது. வழக்கமாக மற்ற மாநிலங்களில் இதன் விலை 1 ரூபாய் அதிகம் (11). இவர் 12 ரூபாய் வாங்குகிறார். அது ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் இந்த முறை எனக்கு வேறு ஒரு சந்தேகம் வந்துவிட்டது.

Thursday, December 13, 2012

தேர்தல்: தமிழகமும், குஜராத்தும்...


குஜராத் தேர்தலையும் தமிழ்நாட்டு தேர்தலையும் கவனிக்கும் போது வித்தியாசங்கள் அநியாயத்துக்கு நம்மை பார்த்து சிரிக்கின்றன. மனமும் இந்த முரண்பாடுகளுக்கு பதிலை தேடுகிறது. சில காரணங்கள் இங்கே. 

தமிழகம் மாநில அந்தஸ்த்தை அடைந்தது 1950 ல். குஜராத் அந்த அந்தஸ்த்தை 1960 ல் பெற்றது.

தமிழகம் இயற்கையாகவே இந்தியா என்ற மத்திய அமைப்பிலிருந்து விலகி இருக்கிறது. மாநில உணர்வு இங்கே அதிகம். இது தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என இரண்டு பிரிவை உருவாக்கியது.

Thursday, December 6, 2012

நாட்டு நடப்பு: இப்படியும் சில பெண்கள்

சமீபத்தில் இந்த செய்தியை படித்தபோது சில கேள்விகளால் தலை சுற்றியது. குஜராத்தில் ஒரு பெண் விரைவில் தாயாகப் போகிறார். எப்படி என்பதில்தான் சிக்கல்.

இவர் 52 வயது பெண். இரண்டு பெண்களையும் கட்டிக் கொடுத்துவிட்டார். கணவனும் இறந்துவிட்டார். தனிமையில் தவித்தார். இந்த சூழ்நிலையில், மனைவியை இழந்த இன்னொருவரை திருமணம் செய்துகொண்டார்.

இதுவரை தப்பில்லை. இது யதார்த்தமான, நியாயமான முடிவுதான். ஆனால் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தது போல், இவருடைய புது கணவருக்கு முதல் தாரத்திலும் குழந்தை இல்லை. எனவே அவருக்கு தன்னுடைய (ராஜ) வம்சம் தழைக்க வேண்டும் என்ற ஆசை.

Thursday, November 29, 2012

இந்த வாரம் எனக்கு நிறைய கெட்ட எண்ணங்கள் உதிக்கலாம்

சமீபகாலமாக அரசியல் குறித்த பதிவுகள் எழுத ஆரம்பித்தால், அது முற்றுபெறாமல் நின்று விடுகிறது. எனவே நானும் அங்கே அதை பார்த்தேன் இங்கே இதை கேட்டேன் என சொந்தக் கதையையும், நகர்வலங்களை பதிவாக்கி கொண்டிருக்கிறேன்.

அனுபவங்களுக்கும் பஞ்சமில்லை. ஒரு பதிவன் என்ற பார்வையில் எதை பார்த்தாலும் அங்கே ஒரு விஷயம் கிடைத்துவிடுகிறது. இந்தவாரமும் அப்படி சில...

அவனும் அப்படித்தானா?

சாப்பாட்டில் எனக்கு ஒரு வித்தியாசமான பிரச்சினை. பொதுவாக எல்லோருக்கும் சிலது பிடிக்கும்; சிலது பிடிக்காது. இது இயற்கை. எனக்கு விருந்தாளி வாழ்கை என்பதால், இந்த விஷயத்தில் ஒரு சுதந்திரம் எனக்கு பறிபோனது.

Wednesday, November 28, 2012

யாராவது ஹெல்ப் பண்ணலாமே?

இணைய தொழில்நுட்ப நண்பர்களுக்கு,

பதிவுகள் எழுதி வாழ்கையை ஓட்டமுடியாது எனத்தெரியும். இருந்தாலும் அது ஓரளவாவது வருமானத்தை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

எனக்கு ஆட்சென்ஸ் அப்ரூவலும் எப்போதோ கிடைத்துவிட்டது. இருந்தாலும் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி என்ற கதையாய், அது எந்த சுகத்தையும் கொடுக்கவில்லை.

Thursday, November 22, 2012

நானும் அதை உண்மைன்னு நம்பிட்டேன் !

ஊரிலிருந்து உறவினர்கள் வந்தார்கள். ஸ்டேஷனுக்கு போயிருந்தேன். வந்தது 3 பேர். வரவேற்க போனது 7 பேர். இரண்டு ஆப்சென்ட்.

பொதுவாக பிரயாணம் என்றால், வண்டி ஏற்ற /அழைத்துவர உதவி தேவை. அதற்கு சிலர் போதும். எண்ணிக்கை அதிகமாக இருக்கவே நானும் தேவையா என நினைத்தேன். ஆனால் இப்போது எல்லாரும் புரோட்டகால் பார்க்கிறார்கள். எங்கே ரிசீவ் பண்ணவேண்டும், யார் வீட்டில் முதலில் சாப்பிடவேண்டும் என எல்லாவற்றிலும் கௌரவம் பார்ப்பதால், எதற்கு வம்பு என நானும் ஸ்டேஷனுக்கு போனேன்.

அங்கே எடுத்தவுடன் காமெடிதான். `பிளாட்பார டிக்கெட் வேண்டாம்; ட்ரெயின் டிக்கெட் எடுக்கலாம்` என்றார் ஒருவர். பிளாட்பாரம் டிக்கெட் 5 ரூபாய். ஆனால் இந்த மணிநகர் ஸ்டேஷனிலிருந்து வட்வா என்ற அடுத்த ஸ்டேஷனுக்கு டிக்கெட் 2 ரூபாய்தான். இது எப்படி இருக்கு? இப்படி இருக்கும்போது 5 ரூபாய் கொடுத்து யாரவது டிக்கெட் வாங்குவார்களா?

Thursday, November 15, 2012

அகமதாபாத் நகர்வலம்

சமீபத்தில் இணையத்தில் மூழ்கிய போது ஒரு விளம்பரம் கண்ணில்பட்டது. `உங்களிடம் கம்ப்யுட்டர் இருந்தால்  ஆன்லைனில் பஸ், டிரைன், பிளைட் டிக்கெட் புக் செய்யலாம். மொபைல் ரீசார்ஜ் மற்றும் இதர சேவைகளும் வழங்கலாம் ` என்று ஒரு விளம்பரம்.

வேலை இல்லாதோர் சங்கத்தில் நான் உறுப்பினராக இருப்பதால், ஆர்வமாக கவனித்தேன். தம்பியுடைய கடை இருக்கிறது. நமக்கும் கம்ப்யுட்டரை தினம் பார்க்கவேண்டும். இது சரிவரும் என தோன்றியது. `நாங்கதான் அடுத்த அம்பானி` என்று அவர்கள் பிலடப் கொடுத்திருந்ததால், போய் பார்ப்போம் என நினைத்தேன். அவர்களுடைய அலுவலகம் சூரத்தில். நான்கு மணி நேர பயணம்.

Thursday, November 8, 2012

சில சட்டங்களும், சில அபத்தங்களும்

சமீபத்தில் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டதன் மூலம், ஒரு முரண்பாடான சட்டம் கவனத்துக்கு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட முரண்பாடான சட்டம் நம் கவனத்துக்கு வருவது இது முதல்முறை அல்ல. இது தொடரும். 

சில சட்ட முரண்பாடுகள்

குஜராத்தில் (2002) பிஜேபி அரசு சட்டசபையை முன்கூட்டியே கலைத்தது. 6 மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றம் கூட்டவேண்டும் என்ற விதி இருக்கிறது, எனவே விரைவில் தேர்தல் தேவை என்று வலியுறுத்தியது. மதஉணர்வு தலைதூக்கிய சூழ்நிலையில் அதை உடனடியாக அறுவடை செய்ய அவர்களுக்கு ஆசை.

Thursday, November 1, 2012

சின்மயி vs ட்வீட்டர்

இந்த வாரம் எங்கு திரும்பினாலும் சின்மயி குறித்த செய்தி அல்லது பதிவுதான். கொஞ்சம் படிக்க ஆரம்பித்தவன் அப்புறம் அதிலேயே மூழ்கினேன். மோசமான ட்வீட்களை ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட, நானும் படித்து தொலைக்க, இவர்களை பொதுவெளியில் சாத்த வேண்டும் என்று ஒரு பதிவில் கருத்தும் சொல்லிவிட்டேன்.

அப்புறம் இது குறித்து கருத்து சொல்வது (கடமை!) என்ற முடிவுக்கு வர, இருதரப்பு வாதங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன்.

இனி பிரச்சினையை பாப்போம். சின்மயியிடம் சிலர் கருத்துக்கள் கேட்க, அவர் மறுத்திருக்கிறார். அதையும் மீறி அவர் சொல்லிய வேறு சில கருத்துக்கள் பிரச்சினைகளை உருவாக்கி இருக்கிறது. இது போக வேறு சில விஷயங்களும் இருக்கிறது.

Wednesday, October 24, 2012

அரவிந்த் கேஜ்ரிவாலும், `சவுக்கு` சங்கரும்

அர்விந்த் கேஜ்ரிவால் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். பல ஊழல் செய்திகளை வெளியிடுகிறார். இவர்களுடைய லோக்பால் போராட்டத்தில்  எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்த  போராட்ட முறை எனக்கு பிடித்திருக்கிறது.

லோக்பால் போராட்டம் தோற்றதன் காரணம் அதில் யதார்த்தம் இல்லை. இருந்தாலும் அந்த சமயத்தில் அரசியல்வாதிகள் பயந்துவிட்டார்கள். அதற்கான அறிகுறி தெரிந்தது. அந்த பயத்தை பயன்படுத்திக் கொண்டு, இருக்கும் ஓட்டைகளில் சிலவற்றையாவது சரி செய்திருக்க முடியும். ஆனால், `முழுதாக வேண்டும்` என்ற இவர்களின் பிடிவாதத்தால், அது பரணுக்கு போனதுதான் மிச்சம்.

Wednesday, October 17, 2012

தேவை ஒரு அடையாளம்

கடலூரில் சில மாதம் இலவச விளம்பர பத்திரிகை நடத்தினேன். முதல் இதழுக்காக டிசைன் செய்த போது, `என்ன கருத்து எதுவும் காணோம், பத்திரிக்கை என்றால் அது இருக்கணுமே!` என்றார் ஒருவர். சம்பிரதாயங்களை மீற முடியுமா. நானும் எழுதினேன்.

முதல் கருத்தாக (2005) எழுதியது ஹாஸ்பிட்டல்கள் பற்றி. அந்த சமயம் ஒருவர் புலம்பினார். ஏதோ ஒரு ஹாஸ்பிட்டலில் உறவினரை சேர்த்திருக்கிறார். பில் வந்த பிறகுதான் அவருக்கு பிபி எகிறியது.

ஆபத்து என்றவுடன் அருகில் இருக்கும் ஹாஸ்பிட்டலில் சேர்த்துவிடுகிறோம். ஆனால் அது நமது தகுதிக்கு தகுந்ததா என்பது நமக்கு தெரிவதில்லை.

Monday, October 8, 2012

காவிரி: இப்படியும் ஒரு புலம்பல்

காவிரி பிரச்சினை மீண்டும் செய்திகளில். இங்கே அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே நம்பமுடியாது. இவர்கள் உண்மையைதான் சொல்வார்கள். அது திரிக்கப்பட்ட உண்மையாக இருக்கும்.

ஆனால் தற்போது வலைப்பதிவுகள் மற்றும் விவாத களங்கள் வந்துவிட்டன. இங்கே வாதிடுபவர்களின் வாதங்களில் அறியாமை இருக்கலாம், போலித்தனம் இருக்காது. எனவே இந்த வாரம் இது போன்ற பிரபலமில்லாத வலை தளங்களை தேடிப் படித்தேன்.

இதில் ஆரோக்கியமான வாதங்கள் ஒரு பக்கம். அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள் இன்னொரு பக்கம்.

Sunday, September 30, 2012

அமெரிக்கா -இந்தியா-ஜப்பான். இது அரசியல் கூட்டணி அல்ல

அமெரிக்கா

சமீபத்தில் வாஷிங்டன் போஸ்டில் ஒரு கட்டுரை படித்தேன். இந்தியா மீது நம்பிக்கை இழக்காதீர்கள் என்று தலைப்பு. கட்டுரையாளர் இந்தியா மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்.

சமீபகாலமாக இந்தியா பொருளாதாரரீதியாக தடுமாறுகிறது. தினம் ஒரு ஊழல் என வெளிப்படுகிறது. அரசு முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது. இதையெல்லாம் தாண்டி 2030 ல் இந்தியாவும் பேசப்படும் என்று எழுதி இருக்கிறார். தற்போது சீனா எப்படி பேசப்படுகிறதோ அதேபோல் இந்தியாவும் பேசப்படுமாம்.

Monday, September 17, 2012

கூடங்குளம்: திரிக்கப்பட்ட உண்மைகள்

கூடங்குளம் மீண்டும் பரபரப்பாகிவிட்டது. இது குறித்து சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். இருந்தாலும் செய்திகளில் சிலவற்றை மட்டுமே உண்மையாக இதன் எதிர்பாளர்கள் பரப்புரை செய்யும்போது, அதற்கு பதில் எழுத வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது.

அணுஉலை விற்கும் நாடுகள் தங்களுக்கு ஒரு கொள்கை மற்றவர்களுக்கு ஒரு கொள்கை என ஓரவஞ்சனை  செய்யவில்லை. எந்த ரிஸ்கை அவர்கள்  எடுக்கிறார்களோ அதேதான் நமக்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தை நாட்டின் முன்னணி கட்சிகள் அனைத்தும் ஆதரிக்கின்றன. எனவே நாடு இந்த யதார்த்தமான பாதையிலிருந்து விலக முடியாது.

Thursday, September 6, 2012

ராஜீவ் கொலையாளிகள் மன்னிக்கப்படுவார்கள்?


மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. அவ்வவப்போது இதற்கான குரல் கேட்டாலும் தற்போது அது சத்தமாக ஒலிக்கிறது.

இந்த விஷயத்தில் நான் என் கருத்தை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பேரறிவாளனை இதுவரை அனுபவித்த தண்டனையோடு விடுதலை செய்வதையும், மற்ற இருவருக்கும் ஆயுள்தண்டனை வழங்குவதையும் நான் ஆதரிக்கிறேன்.

Sunday, September 2, 2012

சிறை அனுபவம்: இப்படியெல்லாம் நாங்கள் பேப்பர் படித்தோம்

சிறைக்கு சென்றபின் முதல் முறையாக இது கஷ்டம் என நான் உணர்ந்தது பேப்பர் படிக்கும் விஷயத்தில்தான். வெளியே இருந்தபோது நான் படிக்கும் நேரம்தான் அதிகம். மினி லைப்ரரி வைத்திருந்ததால், தினம் சில வாரஇதழ்கள் வந்துவிடும். அதை சர்குலஷன் விடும்முன் நான் முதலில் மேய்ந்துவிடுவேன். வியாபாரம் அப்புறம்தான். (பெரும்பாலும் வியாபாரத்தை கவனிப்பது ஊழியர்கள்தான்.) 

அந்த வேலை முடிந்ததும் மதியம் இணையத்தில் உலக பத்திரிகைகளை மேய்வேன். இரவு அரைமணி நேரம் ஆங்கில நாவலுக்காக.. நாவல் மோகம் கிடையாது. தொடர்ந்து படித்தால் ஆங்கிலம் வசப்பட்டுவிடும் என்பதால் அதையும் விடுவதில்லை. இப்படி தினம் பல மணி நேரம் படித்தே பழகிய நான், சிறையில் இந்த ஒரு விஷயத்தில்தான் நொந்துபோனேன்.

Sunday, August 26, 2012

லட்சம் கோடிகளை காப்பாற்ற, 300 கோடி போதும்


கடந்த வருடம்  `ஒரு கோடி பரிசு` என ஒரு பதிவு போட்டிருந்தேன். சமூகத்தில் நடக்கும் ஊழல்கள், மோசடிகள் போன்றவற்றை அரசுக்கு தெரிவிப்பவர்களுக்கு (அப்படி தெரிவிப்பவர்களில் ஒருவருக்கு), அரசு ஒரு கோடி பரிசை வழங்கலாம் என்றும், அப்படி ஒரு திட்டம் இருக்குமேயானால், பணத்தாசை காரணமாக பலர் துப்பறியும் புலிகளாக மாறி, ஊழல் குறித்த தகவல்களை அரசுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே தந்துவிடுவார்கள் என்று எழுதி இருந்தேன்.

தற்போதைய கிரானைட் ஊழலை பார்க்குபோது அது எவ்வளவு அவசியம் என்பது உங்களுக்கு புரியும். அப்படி ஒரு நடைமுறை இருந்திருந்தால் கிரானைட் ஊழல் இந்த அளவுக்கு வந்திருக்காது. கோடிக்கு ஆசைப்பட்டு யாராவது ஒருவர் இதை அரசுக்கு முதலிலேயே போட்டுக் கொடுத்திருப்பார்.

Sunday, August 19, 2012

அகமதாபாத். சில பயண மற்றும் சிறை அனுபவங்கள்

அகமதாபாத் செல்வதாக கடலூரில் இருக்கும் ஒரு நண்பருக்கு சொல்லி இருந்தேன். நான் சிறையிலிருந்து விடுதலையான பிறகு கடலூருக்கு போகவில்லை. போகும் மனநிலையிலும் இல்லை. எனவே அவர் `நானே வந்து பார்க்கிறேன்` என்று ஊருக்கு போவதற்கு முதல்நாள் வந்தார்.

பழைய நண்பர்கள் சந்தித்தால் பேசுவதற்கு நிறைய விஷயம் இருக்கலாம். என்னிடம் இல்லை. காலம் என்னை மாற்றி இருந்தது. பேச்சு குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, மறுநாள் பயணம் என்பதால், வேறு வேலைகளும் இருந்தது. இப்படி பயண வேளையில் நான் பிசியாக இருந்தால் இவருக்கு போரடிக்குமே, என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினேன்.

Saturday, August 4, 2012

தற்காலிக விடுமுறை

நாளை அகமதாபாத் பயணம். இனி வசிப்பிடம் அங்கேதான். அங்கே நிலைமை செட்டாகும் வரை நேரம் கிடைப்பது சிரமமாக இருக்கலாம். எனவே அதுவரை பதிவுகளுக்கு தற்காலிக விடுமுறை.

இதுவரை பின்னூட்டங்களில் ஊக்கமளித்து, வாக்களித்து ஆதரித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Sunday, July 29, 2012

சிறை அனுபவம் : இப்படியா கொடுமைப்படுத்துவாங்க!

நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. நமக்கு ஏதாவது பிரச்சினை வரவேண்டும். அப்போதுதான் நமது தரம் மற்றும் தகுதி தெரியவரும். அந்த வகையில் எனக்கும் சில அனுபவங்கள் இருக்கிறது. இந்த வாரம் அதை பார்ப்போம்.

Monday, July 23, 2012

சிறை அனுபவம்: சில வி ஐ பி களுடன்...

முதலில் நான் இருந்த தொடர் குற்றவாளிகள் பிளாக்கில் பிரபலங்கள் வர வாய்ப்பில்லை. பத்திரிகையில் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டவர்கள் என்ற வகையில் பார்த்தால், சைக்கோ கொலையாளிகள் என்ற பெயரில் சென்னையை நடுங்க வைத்தவர்கள் இங்கே இருந்தார்கள். அந்த நான்கு பெரும் வேறு வேறு செல்/பிளாக் என பிரிக்கப்பட, ஒருவர் நான் இருந்த செல்லில் இருந்தார்.

இதற்கிடையில் நான் வந்த போது இருந்த பிளாக் ரைட்டர் தண்டனை பெற்று பக்கத்து ஜெயிலுக்கு போய்விட்டதால், அவருக்கு கீழே இருந்தவர்கள் அந்த பொறுப்பை ஏற்றார்கள். இவர்கள் வயதில் சிறியவர்கள் என்பதால் இங்கே  நான் சீனியர். கொஞ்சம் பழகிய பிறகு எல்லோரும் நண்பர்கள் ஆகிவிடுவோமே, அந்த தியரியும் எனக்கு சாதகமாக இருந்தது.  

அதுமட்டுமின்றி இன்னொரு முக்கிய விஷயம்தான் எனக்கு பாதுகாப்பாக இருந்தது. வழக்கமாக கைதிகள் வந்தால் விரைவில் பெயிலில் போய்விடுவார்கள். அல்லது கொஞ்சம் பயம் தெளிந்ததும் அவர்களுக்கு பிடித்த / தெரிந்த நபர்களுடன் ஐக்கியமாகிவிடுவார்கள். இதுதான் சிறை யதார்த்தம். நான் மட்டும் அப்படி இல்லை. பெயில் வேண்டாம் என்றும் மறுத்தேன், அந்த செல்லைவிட்டும் போகவில்லை.

Monday, July 16, 2012

சிறை அனுபவம்: 302 மாதிரி பேசற!

கடந்த பதிவான `சிறை அனுபவம்: பணம்` சூப்பர் ஹிட். மிகவேகமாக அதிகம் பேரால் படிக்கப்பட்டது. பலர் இதை வாசித்தது சந்தோசம் என்றாலும், இதை படித்த நபர்களில் ஒரு நல்ல பத்திரிக்கையாளர்/சமூகசேவகர் /அரசியல்வாதி இருந்து, அரசுக்கு முறையான அழுத்தம் கொடுக்கப்பட்டு, இங்கேயும் சீர்திருத்தங்கள் விரைவாக வந்தால் அது இன்னும் அதிக சந்தோஷத்தை அளிக்கும்.

இந்த முறை மற்ற பதிவுகளும் கவனிக்கப்பட்டது. நானும் இந்த வாரம் அதிகம் வாசிக்கப்பட்ட பழைய பதிவுகளை மீண்டும் வாசித்தேன். ஒரு பதிவை எழுதி அதை எடிட் செய்ய பல முறை படித்தாலும் கவனிக்க முடியாத குறைகள், அதே பதிவை பல மாதங்கள் கழித்து படித்தபோது தெரிய வருகிறது. குறைகள் என்றால் சொற் பிழை  அல்லது வார்த்தைகளை கோர்ப்பதில் உள்ள குறையாக இருக்கலாம். பொறுத்தருள்க.

Sunday, July 8, 2012

சிறை அனுபவம்: பணம்

சிறைக்கு சென்றவுடன் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது இதுதான். புதிய கைதிகள் கடுமையாக தண்டிக்கப்பட (வேலை வாங்கப்பட), பழைய கைதிகள் சொகுசாக வாழ்ந்ததுதான். அடுத்த சில மாதங்களில், பழைய கைதிகளில் சிலர் `உள்ளேயே` நன்றாக சம்பாதிப்பதை பார்த்த போது அது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த அதிர்ச்சி விலகி இதுதான் யதார்த்தம் எனப்புரிய பல மாதங்கள் ஆனது. ஊழல் ஒரு கொடிய தொற்று நோய். இதை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் அது உங்களின் டிராலி பாய், உடன்பிறவா சகோதரி என எல்லோருக்கும் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் உத்தமர்களாகி உங்களை காட்டிக் கொடுத்துவிடுவார்கள்.

அரசியலில் இதுதான் யதார்த்தம் என்றால் சிறையிலும் அதுதான். இங்கேயும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இங்கே உங்களை காட்டிக் கொடுக்கபோவது கீழ்நிலைக் காவலர்கள் மற்றும் கைதிகள்தான். எனவே அவர்களுக்கும் அவர்கள் ரேஞ்சுக்கு புகுந்து விளையாட அனுமதித்தே ஆகவேண்டும்.

Monday, July 2, 2012

மௌனம்தான் பேரமோ?

இந்தியாவிற்கு இன்று தேவைப்படும் முக்கிய சீர்திருத்தங்கள் எவை என்று கேட்டால் நான் சொல்ல விரும்புவது இந்த மூன்றைத்தான்.

1) கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாடு 2) தேர்தல் செலவுக்கு அரசே நிதி ஒதுக்குவது 3) நீதித்துறை சீர்திருத்தம்.

முதல் இரண்டு விஷயங்கள் பற்றி நான் பதிவுகள் போட்டிருக்கிறேன். இந்த வாரம் நீதித்துறை. நீதித்துறை என்றாலும் இங்கும் பல பிரிவுகள் வரும். இங்கே இந்த வாய்தா ஊழல் மட்டும்.  

முதலில் ஒரு கதை. ஒருவன் எல்லையை தாண்டி ஏதோ கடத்துவதாக ஒரு அதிகாரிக்கு சந்தேகம். சைக்கிளில் நிறைய சரக்குகளை ஏற்றிவரும் அந்த நபரை பல முறை சோதித்து பார்த்துவிட்டார். ஒன்றும் சிக்கவில்லை.

Sunday, June 24, 2012

இது விஷப் பரிட்சை

இந்த வாரம் `புதிய தலைமுறை`டிவியில் விவாதம் ஒன்றை கவனித்தேன். தமிழருவி மணியன் சில கருத்துக்களை முன் வைத்தார். பிரதமர், முதல்வர் போன்றவர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார்.

நல்ல கருத்து. ஆனால் எல்லோருக்கும் பொருந்துமா? ஒரே மொழி ஒரு நாட்டை இணைக்கவேண்டும். அப்படிப்பட்ட நாடுகளில்தான் இது நல்ல முறையாக இருக்கும். இந்தியாவிற்கு இது தலைவலிதான்.

இங்கே மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே மாநில அளவில் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், போட்டி போடுபவர்கள் அனைவரும் ஒரே மொழியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பார்கள்.

Sunday, June 17, 2012

தனியாருக்கு லாபம். ஆனால் அரசுக்கு நஷ்டமில்லை

கடந்த பதிவில் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை மற்றும் பெட்ரோல் விலை உயர்வுக்கு, பிரணாப் முகர்ஜி பிரமோஷன் இல்லாமல் மந்தநிலைக்கு வந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கும் என்று எழுதி இருந்தேன். இப்போது அந்த வியாதி என்னையும் தாக்கிவிட்டது.

எப்படியாவது வாரம் பதிவு போடவேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் குறைந்துவிட்டது. தீர்வுகள் இல்லாமல், இலக்குகள் இல்லாமல் ஒரு வாழ்கை என்ற நிலையில், டிப்ரசிவ் நோய் மீண்டும் தாக்கி இருக்கிறது. அத்துடன் சனிபெயர்ச்சி என்று சொல்வார்களே அதேபோல் அவ்வப்போது இடபெயர்ச்சி என்பதும் என் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

Saturday, June 2, 2012

கடைசியாக ஒரு வீடு

பெட்ரோல் விலைதான் தற்போதைய பிரச்சினை. சர்வதேச சந்தையில் விலை ஏறுகிறதாம். இது ஒரு காரணம். அடுத்த காரணம் ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது. முதலாவது சர்வதேச நிலை. அது நம் கையில் இல்லை. இரண்டாவது நிச்சயம் இந்த அரசின் திறமையின்மையை காட்டுகிறது.

இங்கே விமர்சிக்கப் படவேண்டியவர் பிரணாப் முகர்ஜிதான். கூட்டணி நிர்பந்தம், பாப்புலர் அரசியல் என சில விஷயங்கள் முடிவெடுப்பதை பாதித்தாலும், இவருடைய நிர்வாகத் திறமை தற்போது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. 

இருந்தாலும் அனுபவசாலியான அவரிடம் திறமை இல்லை என்று சொல்லமுடியுமா? ஒருவேளை மந்தமாகிவிட்டாரா? அதற்கு ஒரு காரணம் தெரிகிறது. இந்தியாவின் வளர்ச்சியை விட அவருடைய அரசியல் வளர்ச்சி படு மந்தமாக இருக்கிறது. அது ஏற்படுத்திய பாதிப்பாகவும் இருக்கலாம்.

Tuesday, May 22, 2012

அரசியலும், கர்ணன் தியரியும்

மீண்டும் ஒரு (புதுக்கோட்டை) இடைத்தேர்தல். மறுபடியும் அரசுக்கு தண்டச் செலவு. இடைத்தேர்தல்கள் ஒரு ஆட்சியின் தலைவிதியை மாற்றாதவரை, இவை தேவையே இல்லை. சிக்கனம் என்ற பெயரில் பல நடவடிக்கைகளை எடுக்கும் மத்திய அரசுக்கு இது மட்டும் கண்ணுக்கு தெரியவில்லை. தெரிந்திருக்கும். ஆனால் சீர்திருத்தங்கள் கொண்டுவருவது பற்றி பேசுவார்கள்..பேசுவார்கள்...இன்னும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இந்த அனாவசியமான, சம்பிரதாயமான இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் ஒதுங்கிவிட்டன. இருப்பது தேமுதிக மட்டுமே. இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியின் பண மற்றும் அதிகார பலத்தை எதிர்த்து போராடுவது சிரமம் என்று புறக்கணித்த கட்சிகள் சமாளித்தாலும், எதற்கு (லாபமில்லாத) செலவு செய்வானேன் என்பதுதான் முக்கியமான காரணம்.

Sunday, May 13, 2012

இந்தியாவின் வறுமையும், MLM தியரியும்

2005 ல் நான் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன். ASIA TIMES என்ற இணைய இதழில் சூடாக கருத்து மோதல் நடந்து கொண்டிருந்தது. ஆர்வமாக கவனித்தேன். அதில் ஒரு சீனன் இந்தியாவை மேலை நாடுகளோடு ஒப்பிட்டும், நம் நாட்டின் ஜாதி அமைப்பை பற்றியும் விமர்சிக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு கோவம் வந்தது. அதுவரை எதுவும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. இந்த அர்த்தமற்ற விமர்சனம் என்னை தூண்டியதால் பதில் எழுதினேன்.

என்னுடைய ஆங்கிலமோ சுயம்பு. ஆங்கில நாவல்கள் படித்தும், டிவி கேட்டல் மூலமாகவும் கற்றது. எழுத வரவில்லை. நானும் அந்த முயற்சில் கொஞ்சம் எம்பி எம்பி பார்த்து, ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று விட்டுவிட்டேன். இருந்தாலும் இது கோபத்தை தூண்டி விட, வார்த்தைகளும் வேகமாக வந்து விழ, இலக்கணத்தை பற்றி கவலைப்படாமல் எழுதி அனுப்பினேன். அது அதிக திருத்தங்கள் இல்லாமல் பிரசுரமாகி, பரவாயில்லை பாஸாயிட்டோம் என திருப்தியையும் கொடுக்க, அது தொடர்கதையானது.

கடந்த பதிவில் இந்தியாவை மேலை நாடுகளுடன் ஓப்பிட்டு நண்பர் வவ்வால் பின்னோட்டம் இட்டிருந்தார். அது அந்த முதல் கடிதத்தை நினைவுபடுத்தியது. அந்த கடிதத்தில் நான் இப்படி முடித்தேன்.

Tuesday, May 1, 2012

வரும் முன் காப்போம் !

இந்த வாரம் கல்வித்துறை குறித்த செய்திகளை மேய்ந்ததில் இதை கவனித்தேன். ஆசிரியர் வேலைக்கு இந்த ஆண்டு 25000 பேர் தேர்வு செய்யப்பட போகிறார்களாம். இதற்கு விண்ணப்பித்திருப்பவர்கள் 6 லட்சம் பேர். இங்கே புள்ளி விவரத்தை விட்டுவிடுவோம். அரசின் எந்த ஒரு துறையிலும் வேலை வாய்ப்பு என்றால், அங்கே போட்டி கடுமையாக இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.

அரசுத் துறையில் வேலை என்றால் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம். இன்றைய செய்தியை பாருங்களேன். பண்ருட்டியில் ஒருவர், அதுவும் ஸ்டேஷன் மாஸ்டர், குடி போதையில் பணியில் இருந்திருக்கிறார். பணம் எண்ணக் கூட முடியவில்லையாம். அந்த அளவுக்கு அரசுத் துறைகள் உங்களுக்கு பாதுகாப்பை தருகிறது.

Monday, April 23, 2012

பணக்கார பிரபு யாரும் இல்லையா?

திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகமே மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவியது இன்றைய கல்வி எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என்பதை காட்டுகிறது. இதில் பணம் நோக்கமாக இல்லை. தான் வெற்றியாளனாக வர வேண்டும் என்ற வெறி மாணவர்களுக்கு வராமல் ஆசிரியர்களுக்கு வர, அதையும் அவர்கள் குறுக்கு வழியில் அடைய முயற்சித்திருக்கிறார்கள். இதுதான் செய்தி.

இது ஒரு போலித்தனமான பெருமை என்றாலும், இந்த வியாதி பலரை பிடித்து ஆட்டுவதும் நிஜம். அரசியல்வாதிகள் பணம் கொடுத்து கூட்டத்தை காட்டுகிறார்கள். நடிகர்கள்/ தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே படங்களை ஓட்டி, தங்களை வெற்றி வீரராக காட்டிக் கொள்கிறார்கள். இதெல்லாம் எந்த வகை? இதில் பெருமை மட்டுமில்லை, சில லாபமும் இருக்கிறது. 

ரஜினியின் சந்திரமுகி கூட 800 நாட்கள் தொடர்ந்து `ஓடி` சாதனை படைத்ததாம்! ஆனால் அது சாதனைக்காகவே ஓட்டப்பட்டது என்று எப்போதோ படித்தேன். இத்தனைக்கும் அவர் வெற்றியாளர். அவருக்கும் இது போன்ற போலித்தனம் தேவைபடுகிறது.

Tuesday, April 17, 2012

ஒரு முட்டாளும், ஒரு அப்பாவியும்..

சில நாட்களுக்கு முன் கவனித்த செய்தி இது. பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் IPL மேட்ச் பார்க்க ஃப்ரீ டிக்கெட் கேட்டதாகவும், அதற்கு இவர்கள் மறுத்ததால் மைதானத்தை சுத்தம் செய்ய மறுத்ததாகவும் டைம்ஸ் நவ் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பபட்டடது.

அது தொடர்பான விவாதத்தில், அர்னாப் ஏதோ ஒரு செக்க்ஷ்னை சொல்லி, `இப்படி கேட்பது குற்றமாகும்` என மிரட்ட, அந்த பக்கம் இருந்த அரசியல்வாதி (துணை மேயர்), அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பேசிக்கொண்டிருந்தார். கூடவே, `பத்திரிகையாளர்களும் கவர் வாங்குவதில்லையா?` என அவர்களையும் வம்புக்கு இழுத்தார்.

ஒரு பக்கம் சட்டத்தின் மீது பயமின்மை, இன்னொரு பக்கம் தான் செய்யும் தவறை நியாயபடுத்த, `நீ மட்டும் யோக்கியமா?` என கேள்வி. இதுதான் இன்றைய அரசியல் என்பதை இந்த பேட்டி நிரூபித்தது. .

Tuesday, April 10, 2012

இந்திய ராணுவமும் அதன் உளுத்துப் போன கொள்கைகளும்!

சமீபத்தில் NDTV யில் ராணுவம் குறித்த ஒரு டாக் ஷோ பார்த்தேன். பல கருத்துக்கள் பேசப்பட்டன. காஷ்மீரில் ஒரு பகுதிக்கு சரக்கு எடுத்துக் கொண்டு போகும் போது, ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதில் மகனை பறி கொடுத்தவர் பேசினார். இந்தியாவில் மட்டும்தான் ஒரு இஞ்சின் மட்டுமே கொண்ட ஹெலிகாப்டர் சேவையில் இருந்ததாம். அதில் இவர் மகன் பலியாகி இருக்கிறார். `நாட்டுக்காக உயிர் கொடுப்பது வேறு. ஆனால் தகுதி அற்ற தளவாடங்களின் மூலம் ஏற்படும் விபத்தால் யாரும் பலியாகக் கூடாது` என்றார்.

அடுத்து கவனித்தது, போபார்ஸ் சிண்ட்ரோம். இந்த ஊழல் மீடியாவில் கடுமையாக கிழிக்கப்பட்டதால், பல ராணுவ அதிகாரிகள், அவ்வளவு சீக்கிரத்தில் முடிவெடுப்பதில்லையாம். இந்த புதுத் தலைவலி தற்போது ராணுவத்தை ஆட்டிப் படைக்கிறது. இதனால் ஒரு பக்கம் ஆயுத பற்றாகுறை இருக்க, இன்னொரு பக்கம் அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பிய கொடுமையும் நடந்திருக்கிறது.

Thursday, March 29, 2012

இலங்கை. இனி எது நடந்தாலும் நன்மைக்கே!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான விவாதத்தை அன்று மதியம் டிவியில் பார்த்தேன். ஈவினிங் கடைக்கு வந்தால், ராஜ நடராஜ அண்ணனின் இந்த தீர்மானம் குறித்த பதிவு. அவ்வளவு வேகம். இது அவருக்கு சந்தோஷமான செய்தி. எனவே உடனடியாக அவருடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

எனக்கும் இந்தியாவின் இந்த முடிவு அதன் விருப்பமான முடிவாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம். உடனே பதிவு எழுத ஆரம்பித்தேன். சில பல காரணங்களால் உடனே முடியவில்லை. ஆனால் அதற்குள் இதே பாணியில் வேறு சில பதிவுகள் வந்து விட்டன. சரி, இது பத்தோடு பதினொன்று...

சினிமாவில் இந்த காமெடியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது காமெடி சீன் இல்லை. யதார்த்தத்தை பிரிதிபலிக்காத எதுவும் காமெடியாகத்தானே இருக்கும். இது அந்த வகை காமெடி. அதாவது எல்லா உதையும் வாங்கிய பிறகு, கடைசி நேரத்தில் வில்லன் மனம் திருந்திவிட்டதாக வசனம் பேசுவான். யதார்த்தமாக படங்கள் வந்த காலத்திலும் இந்த அபத்தம் சினிமாவில் உண்டு.

Thursday, March 22, 2012

சந்தர்ப்பவாத தமிழன்!

தற்போதைய பரபரப்பு செய்தி இலங்கை அரசு மீதான மனித உரிமை குற்றச்சாட்டுதான். இந்த விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டு மொத்த ஆவேசம் இலங்கைத் தமிழனுக்கு ஆச்சர்யத்தையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் எனக்கோ ஒரு சொந்த அனுபவத்தை நினைவுபடுத்தியது.

(இது சொந்த கதை. தெரிந்தவர்கள் யாராவது படிக்கலாம். எனவே உள்ளதை உள்ளபடியே சொல்லமுடியாது. முத்துசாமியை முத்துலட்சுமியாக மாற்றி இருப்பேன். சில சம்பவங்களையும் இடம் மாற்றி இருப்பேன்.)

ஒரு உறவினர் கடைக்கு வந்தார். பேச்சலராக இருந்தேன். வந்தவர், `கல்யாணம் பண்ணிக்க.. வயசிருந்தாலும் ஏன் தனியா கஷ்டப்படனும்?... குடும்பம் பண்ணாலும் அதே செலவுதான் ஆகும்...` என்றார். இது அவ்வப்போது கிடைக்கும் உபதேசங்கள்தான். எனவே நான் பொருட்படுத்தவில்லை.

Monday, March 12, 2012

இந்திய ஜனநாயகம். இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை!

குடும்ப அரசியல் இந்தியாவில் வேரூன்றிவிட்டது. ஜம்மு காஷ்மீரில் ஓமர் அப்துல்லா வந்தார். அடுத்து உ பி யில் அகிலேஷ் பதவி ஏற்கப் போகிறார். பஞ்சாபில் பிள்ளைக்கு இன்னும் தகுதி வரவில்லை. இனி என்ன... மாநிலம் தோறும் இந்த அநியாயத்தை கட்சித் தலைவர்கள் அரங்கேற்றலாம். அதேசமயம் இந்தியாவில் வாரிசுகள் ஆட்சியை பிடிப்பது அப்பட்டமான சர்வாதிகாரத்தினால் இல்லை. இருந்தாலும் இது வேறுவிதமான சர்வாதிகாரம்.

இது அது குறித்த பழைய பதிவு. சற்றே மாற்றங்களுடன்... 

இந்தியா ஒரு முழுமையான ஜனநாயக நாடு என்று சொல்ல விடாமல் தடுப்பது நம் நாட்டின் சில அரசியல் கட்சிகள் சில தனிப்பட்ட நபரின் குடும்ப சொத்தாகிப் போனதுதான். இன்று இந்தியாவில் கட்சிகள் பெருகிவருவதன் காரணமும் இதுதான். ஒரு கட்சியில் தொண்டனாக சேர்ந்து பின்னர் அந்த கட்சியின் தலைமை பொறுப்புக்கு வருவது தற்போது சாத்தியமில்லாத சூழ்நிலையாக உருவாக்கி இருப்பதால், பலர் தனி ஆவர்த்தனம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இதை தடுக்க அரசியல் கட்சிகளையும் முழுமையான ஜனநாயக இயக்கமாக செயல்பட வைக்க வேண்டும்.

Sunday, March 11, 2012

`கைப்புள்ள` ராகுல்

இரவு 10 மணிக்கு முன் டிவியை (நாடகங்கள்) பார்த்தால் எனக்கு தலைவலி வரும். அதே 10 மணிக்கு மேல் டிவியை பார்க்காவிட்டாலும் (செய்திச் சேனல்கள்) தலைவலி வரும். அதுவும் தேர்தல் நேரம். எனவே இந்த வாரம் முழுக்க கவனம் இங்கேதான்.

ஒரு ஆளுங்கட்சி (உ.பி.) தோற்கடிக்கப்பட்ட செய்தியை கேட்ட போது, அது இந்தியாவில் ஜனநாயகம் வெற்றி பெற்ற கதையை சொன்னதால் சந்தோஷமாய் இருந்தது. ஆனால் அடுத்த முதல்வர் அப்பாவா, பிள்ளையா என்ற போட்டியை பார்த்த போது அந்த சந்தோஷமும் பறிபோனது. இது இந்திய ஜனநாயகம் இன்னமும் சுத்திகரிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதை உணர்த்துகிறது.

Monday, March 5, 2012

மூன்று விஷயங்கள்: அரசியல், என்கவுண்டர், கூடங்குளம்.

இந்த வாரம் அதிகம் படித்தது என்கவுண்டர் தொடர்பான செய்திகள் மற்றும் கருத்துக்கள்தான். `இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். என்கவுண்டர் கூடாது` என்று சிலர்.

`இறந்தவர்களுக்காக நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் `பல அரசியல் ஊழல் பேர்வழிகளும், போலீஸ் கொள்ளைகாரர்களும் வெளியில் இருக்க, இந்த கொள்ளையர்களை மட்டும் ஏன் பலிகடாவாக்க வேண்டும்` இது வேறு சிலர்.

வாதப்படி பார்த்தால் எல்லாம் சரிதான். ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் யதார்த்தம் எப்போதுமே வேறுவிதமாகத்தான் இருக்கும்.

Monday, February 27, 2012

வங்கிக் கொள்ளைகளும், போலீசுக்கு சில ஆலோசனைகளும்!

சிறை பதிவை தொட்ட நேரம் சரியில்லை போலிருக்கிறது. மற்ற விஷயங்கள் சிந்தனையை இழுக்கிறது. வங்கிக் கொள்ளைகள் மீதுதான் இப்போதைய கவனம்.

மக்களை பொறுத்த வரையில், அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு சில வங்கிக் கொள்ளைகள் நடந்தன, போலீசார் விரைவாக செயல்பட்டு அவர்களை என்கௌன்டரில் கொன்று விட்டார்கள். ஆக செய்தி முடிந்துவிட்டது.

ஒரு பரபரப்பான கேஸில் போலீசார் வடிகட்டிய பொய்யை சொல்ல வாய்ப்பில்லை. இறந்தவனில் ஒருவன் அப்பாவியாய் இருந்தாலும் அந்த உண்மை வெளிவந்து போலீசாரின் தலை உருளும். எனவே போலீசாரின் வாதத்தை நம்புவோம். ஆனால் இவர்கள் கொல்லப்பட்ட விதம் எப்படி என்பது வேண்டுமானால் விவாதமாகலாம்.

Friday, February 24, 2012

ஷேர் மார்கெட். பிளாட்பார ஃபாரம் முதல் Odin Diet வரை

தலைவலியில் மிகப் பெரிய தலைவலி அரசியல்வாதியாக இருப்பதுதான். மற்ற துறைகளில் அதை தொடர்ச்சியாக கவனிப்பதன் மூலம் அந்த துறை குறித்து ஆழ்ந்த அறிவை பெறமுடியும். ஆனால் அரசியலுக்கு அப்படி சொல்ல முடியாது. இது பல துறைகளை கட்டி ஆளும் துறை என்பதால் எதிலும் உங்களால் பாண்டித்தியம் பெற முடியாது. சில துறைகளில் ஆர்வம் காரணமாக கூடுதலாக கவனிக்கலாம். அவ்வளவுதான்.

இங்கே வாரம் ஒரு பிரச்சினை எழும்பும், உடனே அது குறித்த ஆராய்ச்சியில் மூழ்குவோம். அதில் ஓரளவு புரிதல் வருவதற்குள் இன்னொரு பிரச்சினை நம் கவனத்தை ஈர்க்கும். இப்படி அங்கே இங்கே மேய்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை. இதே தலைவலிதான் அரசியல் குறித்து எழுதுபவர்களுக்கும்.

Thursday, February 16, 2012

2g கொள்ளையின் மூன்றாவது மோசடி!


இதுவரை 2g யில் இரண்டு மோசடிகளைத்தான் நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஓன்று: முறைகேடாக லைசன்ஸ் பெற்றது. இரண்டு: லைசன்ஸ் வாங்கிய பிறகு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை விற்றதன் மூலம் அநியாய லாபம் பார்த்தது.

தற்போது அந்த லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதன் மூலம் அந்த மோசடி முறியடிக்கப்பட்டது. இனி அவர்கள் புதிதாக லைசன்ஸ் எடுத்தாக வேண்டும். இவர்களின் பங்குகளை வாங்கிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதோ ஒரு வகையில் பேசி அவர்களுடைய பணத்தை வாங்கிவிடுவார்கள் அல்லது தங்களின் தொழிலை தொடர்கிறார்கள். அது அவர்களின் தலைவலி. எனவே அதை விட்டுவிடுவோம். ஆனால் இங்கே ஒரு மூன்றாம் கோணம் இருக்கிறது. அதாவது சொல்ல மறந்த கதை ஓன்று இருக்கிறது. நாம் அதை மட்டும் பார்ப்போம்.

Tuesday, February 14, 2012

2g கொள்ளை. இது வெளிச்சத்துக்கு வராத கொள்ளை!


ஆங்கிலத்தில் laughing all the way to the bank என்று ஒரு பன்ச் டயலாக் உண்டு. அதாவது ஒரு பிரச்சினையில், மற்றவர்களை முட்டாளாக்கிவிட்டு ஜெயித்தவர் பேங்குக்கு சிரித்துக் கொண்டே போனாராம். இந்த 2g வழக்கிலும் அப்படி சிரிப்பவர்கள் இருக்கிறார்கள். எனது ஷேர் மார்கெட் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டதை சொல்கிறேன், யார் சிரிக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள.

இங்கே நான் உங்களுக்கு ஷேர் மார்கெட் பற்றி கிளாஸ் எடுக்கப் போவதில்லை. மேலோட்டமாக இந்த மோசடி மட்டும்.

இங்கே Insider Trading என்ற மோசடியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு கம்பனி பற்றிய தகவல்களை, அவர்களிடமிருந்து முன் கூட்டியே தெரிந்து கொண்டு, அந்த ஷேரை குறைந்த விலையில் வாங்கி, பின்னர் அதை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்ப்பதுதான் அது. இப்படி கம்பனி பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு சொல்வது குற்றம்.

Sunday, February 5, 2012

2g உச்ச நீதிமன்ற தீர்ப்பு. நாட்டுக்கு லாபமா, நஷ்டமா?

சில விஷயங்களில் தவறை தவறு என்று கண்டிக்க முடியாது. அதேபோல் சில விஷயங்களில் சரி எனப்படுவதை சரி என்றும் சொல்லமுடியாது.

மேலே சொன்ன வார்த்தைகள் உங்களுக்கு குழப்பமாக இருக்கும். ஆனால் 2g வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தடாலடி தீர்ப்பு இந்த வகைதான். இந்த தீர்ப்பு சட்டத்தை நிலைநாட்டி ஒரு தவறான செயலை ரத்து செய்திருக்கலாம். ஆனால் இதை இப்படி அணுகியது தவறாகவும் போகலாம்.

இந்த உதாரணத்தை பாருங்கள். ஒரு மைனர் பெண்ணுக்கு மேஜர் ஆகாமலேயே கட்டாயத் திருமணம் ஆகிவிட்டது. எனவே இந்த திருமணம் செல்லாது என்று ஒருவர் கோரிக்கை வைக்கிறார். அவர் மைனர் என்பது ஊர்ஜிதமாகி இந்த திருமணம் செல்லாது என்று தீர்பளிக்க முடியுமா?

Wednesday, February 1, 2012

இவர் டாக்டரா, வியாபாரியா?

சிறை அனுபவம் குறித்த் பதிவு அனுமார் வால் போல் நீள்கிறது. முழுவதையும் எழுதிவிட்டுத்தான் அதை வெளியிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். இதற்கிடையில் வேறு சில அனுபவங்கள். பதிவுலகில் காணாமல் போய்விடக் கூடாது என்பதற்காக இந்த இடைக்கால பதிவு.

சமீபத்தில் என்னுடைய பழைய பதிவு ஓன்று ஒரே நாளில் அதிகம் படிக்கப்பட்டது. அப்படி என்ன அதில் எழுதி இருக்கிறேன் என்ற ஆர்வம் ஏற்பட, மீண்டும் படித்தேன். சில குறைகள் தென்பட்டது. திருத்தினேன்.

அதாவது ஏற்கனவே நான் சொன்ன ஒரு விஷயம் தற்போது அபத்தமாக தெரிய, அதை திருத்திவிட்டேன். அது தேர்தலுக்கு முன் எழுதப்பட்டது. அந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகள் பொருத்தமாக இருந்திருக்கும். தற்போது அதை படித்தால் அபத்தமாக இருக்கும். `சவுக்கு` சங்கர் தளத்தில் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பதாலும், சில கட்டுரைகள் நிறையவே வெளிச்சத்தை காட்டியதாலும் இந்த மாற்றம்.

Friday, January 20, 2012

நண்பன் விமர்சனம். ஸாரி, சங்கர் விமர்சனம்


சிறை அனுபவம் எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டதால், அது குறித்து கொஞ்சம் ஆழமாகவே எழுத ஆரம்பித்தால், அது பல இணை துணை சம்பவங்களோடு மெகா சீரியலாக போய்க்கொண்டிருகிறது. இதை சில பதிவுகளாக பிரிப்பதா அல்லது அதன் போக்கில் விடுவதா என்ற குழப்பம் ஒரு பக்கம். இதற்கிடையில் நண்பனை பார்த்ததால், அதாவது சங்கரின் `நண்பனை` பார்த்ததால் இந்த பதிவு

டைரக்டர் சங்கர் கமர்ஷியலாக வெற்றிப் பட இயக்குனராக இருந்தாலும், பாய்ஸ் படத்துக்கு பிறகு அவர் மீதான சந்தேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு முன் பசுத்தோல் போர்த்தி வலம் வந்தவர், சில வெற்றிகளை கண்டவுடன், கொஞ்சம் திரையை விளக்கி அவருடைய ரசனையை காட்டி இருக்கிறார். அதற்கு கிடைத்த எதிர்ப்பு அவரை அடக்கி வாசிக்க வைத்தாலும், அவருடைய ரசனைகள் எப்படியும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

Tuesday, January 10, 2012

இங்கே நக்கீரர்கள் யாரும் இல்லை!



கடந்த 5 ம் தேதி வெளிவந்த தினமணி தலையங்கம் `தவறான சிகிச்சை` மிக அருமை. டாக்டர்களுக்கு மட்டும் சுரணை இருந்திருந்தால் இதை படித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு விட்டு சுயபரிசோதனையில் இறங்கி இருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதேசமயம் டாக்டர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை. ஒரு வக்கீல் தாக்கபட்டால் வக்கீல்கள் ஸ்ட்ரைக்; கண்டக்டர் தாக்கப்பட்டால் பஸ்கள் ஸ்ட்ரைக் என்று தன் இனத்துக்காக (துறை) குரல் கொடுக்கும் மனப்பான்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஜாதி மற்றும் மத உணர்வுக்கு இணையாக நாட்டை நாசாமாக்க கிளம்பி இருக்கும் புது வியாதி இது.

Sunday, January 8, 2012

பரிதாபமான கடலூர்!


கடலூருக்கு வந்த சோதனை கொடுமைதான். சுனாமி தாக்கிய அன்று, காலை 9 மணிக்கு கூத்தப்பாக்கத்திலிருந்து வண்டியில் கடைக்கு வந்து கொண்டிருந்தேன். சினிமாவில் பார்ப்பதைப் போல் மக்கள் கூட்டமாக எதிர் திசையில் ஓடிக் கொண்டிருந்தார்கள். அந்த காட்சியை கண்ட எல்லோருக்கும் திரும்பி ஓட வேண்டும் என்றுதான் தோன்றும். எனவே நானும் திரும்பி விட்டேன். இரண்டாவது முறை கடைக்கு அருகில் வரை வந்துவிட்டேன். அப்போது பல தெரிந்த முகங்களும் `திரும்பி போங்க` என்று கத்தி கொண்டே ஓட, இந்த முறையும் ஓட்டம்.

அவர்கள் ஓடிய வேகத்தை பார்த்தால் கிட்டத்தட்ட கடலூர் பஸ் ஸ்டாண்டை அலை தொட்டுவிட்டதை போன்ற தோற்றம். அந்த நேரம் பார்த்து கடலூர் புதுப்பாளையத்துக்கு போன்கள் வேலை செய்யாததால், சந்தேகம் மேலும் வலுத்தது. சந்தேகமும் வதந்திகளும் மக்களை எப்படியெல்லாம் பயமுறுத்தும் என்பதை நேரடியாக கண்ட சம்பவம் அது. இந்த முறை `தானே` புயல் கடலூரின் அடிப்படை கட்டமைப்பை பெருமளவு சீரழித்திருகிறது.