!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, April 19, 2011

இந்திய ஜனநாயகம்: இந்த சீர்திருத்தம் மிகமிக அவசியம்.


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவிகிதம் கிட்டத்தட்ட எண்பதை தொட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது விழிப்புணர்வால் வந்த சதவிகீதமா, அல்லது பணம் பாதாளம் வரை பாய்ந்ததன் பலனா என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் தெரியும். 

காரணங்கள் எதுவாக இருந்தாலும் நாம் நல்லதையே நினைப்போம். தேர்தல் கமிஷனின் வேலை மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வகை செய்வதும், முறைகேடுகளை தடுப்பதும், பணம் சிலருக்கு சாதகமாகவும் மற்றவர்களுக்கு பாதகமாக இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான். அந்த வகையில் தேர்தல் கமிஷன் தன் கடமையை முடிந்த வரை முறையாகச் செய்துவிட்டது.

Tuesday, April 12, 2011

தேர்தல்: முட்டாள்களை அடையாளம் காண ஒரு வழி.

அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை முடித்து விட்டார்கள். இனி மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம். ஆனால் இப்போதும் சிலர், `ஆமா, இவங்க ஊழல் பண்ணி பணம் சம்பாதிப்பதற்கு நாம எதுக்கு ஓட்டு போடணும்?` என்று அபத்தமான வாதம் செய்கிறார்கள். இப்படி வாதம் செய்பவர்கள் படித்தவர்கள் என்பதுதான் கொடுமை. இதிலிருந்து ஓன்று தெரிகிறது. கல்வி அறிவு என்பது வேறு. பொது அறிவு என்பது வேறு என்று. இந்தியாவில் கல்வி அறிவு வளரும் வேகத்தில் பொது அறிவு வளரவில்லை. இவர்கள் ஓட்டு போடாததால் மிக மோசமானவர்கள் அதிகாரத்துக்கு வர வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை இந்த படித்த மேதாவிகளுக்கு யார் புரிய வைப்பது?

உங்கள்  மகனை ஒரு நல்ல தரமான கல்லூரியில் சேர்க்க விரும்புகிறீர்கள். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்காக நீங்கள் உங்கள் மகனை கல்லூரிக்கு அனுப்பமாட்டீர்களா என்ன? கிடைப்பதில் சிறந்ததை தேர்ந்தேடுப்பதுதானே நடைமுறை  வழக்கம். ஆனால் தேர்தலில் மட்டும் மக்கள் இது போல் சிந்திப்பதில்லை. காரணம், தன் மகனின் எதிர்காலத்தில் ஒரு வருடம் கூட பாழாகிபோகக்கூடாது என்று நினைப்பவர்கள், அப்படி ஒரு அக்கறையை தேசத்தின் மீது காட்டுவதில்லை.

Friday, April 8, 2011

அணு மின்சாரம்: நோகாமல் நுங்கு தின்ன முடியுமா?

இது ஒரு நேரம்கெட்ட பதிவு. அணு உலை விபத்திற்கு பிறகு, அதன் பாதிப்பை இன்னும் முழுதாக அலசமுடியாத நிலையில் , அணு உலைகளுக்கு ஆதரவாக யாரும் எழுத மாட்டார்கள்.  இருந்தாலும் கல்கியில் ஞாநி அவர்களின் அணுஉலைகள் பற்றிய `பிருமாண்டமான இலவசம் வருகிறது! உஷார் !!` என்ற கட்டுரையை படித்தவுடன் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று தோன்றியது. எனவே எழுதிவிட்டேன். 
   

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டு அணு மின் நிலையங்கள் விபத்தில் சிக்கிய பிறகு, இப்படி ஒரு ஆபத்தான பாதையில் நாம் போகவேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இன்றைய நமது தேவைக்காக பல தலைமுறைகளை சிக்கலில் விட்டுவிட்டு செல்ல நமக்கு உரிமை இருக்கிறதா என்ற கேள்வியெல்லாம் கேட்கப்படுகிறது.

நியாயமான கேள்விதான் இது. ஆனால், ஒரு ஊதாரி தகப்பனாக நாம் நமது பரம்பரை சொத்தை காலி பண்ணிவிட்டு, பிள்ளைகளை நிதி ஆதாரம் இல்லாமல் நடுத்தெருவில் விட்டுவிட்டு செல்லும் உரிமை மட்டும் நமக்கு இருக்கிறதா? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது? ஏனென்றால் நாம் தற்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலைமையை அப்படியே தொடர்ந்தால், எதிர்கால சந்ததியருக்கு எரிபொருள் இல்லாமல் மாட்டுவண்டியும், கைவிசிறியும் கூடவே பூமியை வாழ முடியாத அளவுக்கு வெப்பமாகவும் மாற்றிவிட்டுப் போகப்போகிறோம்.