!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, September 20, 2011

ஒரு நீதிக் கதை, ஒரு விளக்கம், ஒரு ஜோக்ஸ்.


இந்த கதையை ஒரு கென்ய பத்திரிகையில் படித்தேன். அரசியல்வாதிகளும், பிரபலமான மனிதர்களும் படிக்க வேண்டிய கதை. நீதிக் கதைகள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. இதையே நீங்கள் வேறு விதமாகவும் படித்திருக்கலாம். இருந்தாலும் நீதி கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். எனவே படியுங்கள்.

கென்யாவும் ஜனநாயக நாடு என்பதால், அங்கேயும் அரசியல்வாதிகளின் மீது ஊழல் புகார். அங்கே ஒரு கட்டுரையாளர் அவருடைய அரசியல் விமர்சனத்தில் இந்த கதையை சொன்னார்.

Tuesday, September 13, 2011

வெல்கம் பிஜேபி!


இது (பரபரப்பில்லாத) கிரிக்கெட் சீசன். கிரிக்கெட்டில் அவ்வவப்போது நமது கதாநாயகர்கள் மாறுவார்கள். உண்மையில் கிரிக்கெட்டில் நாம் எந்த ஒரு தனி நபர்களையும் துதி பாடுவதில்லை. அவர்கள் பார்மில் அடித்து ஆடும்போது தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவோம். சரியாக விளையாடாமல் கட்டை போட்டால், `அவுட்டாகித் தொலையேன்` என்று சபிப்போம்.

நாட்டிற்கு வெற்றியையும், பெருமையையும் தேடித்தருகிறார்கள் என்ற வகையில்தான் நாம் இவர்களை ஆதரிக்கிறோம். அவர்களால் நமது அணிக்கு பலம் இல்லை எனும்போது அவர்கள் புறக்கனிக்கப்படுவதையே விரும்புவோம். எனது அரசியல் நிலைப்பாடும் அந்த வகையை சேர்ந்ததுதான். மன்மோகன் சிங் என்ற நேர்மையான பொருளாதார நிபுணர் நம் நாட்டின் பிரதமராக வந்தபோது, இவரால் நாடு வளர்ச்சி பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதுவும் செய்ய இயலாமல் இவர் பொம்மையாய் இருப்பதை பார்க்கும் போது இவர் போய் சேர்ந்தால் தேவலை என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது.