!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, August 31, 2011

அன்னா ஹசாரேவின் போராட்டத்தினால் கிடைத்த லாபம் + நஷ்டம்


இரண்டாவது சுதந்திரப் போர் (?) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் யார் ஜெயித்தார்கள் என்று ஆராய்ச்சி செய்யாமல் ஜனநாயகம் ஜெயித்தது என்றே சொல்வோம்.  அரசு அன்னாவின் மிரட்டலுக்கு பணிந்தும் போகவில்லை, அதேசமயம் மீண்டும் ஒரு முறை அவரை கைது செய்து அவருடைய உண்ணாவிரதத்தை முறியடிக்காமல் யதார்த்தமாகவும் செயல்பட்டிருகிறது.

அன்னாவின் மிரட்டலுக்கு அரசு பணிந்து போயிருந்தால் பலர் இந்த பிளாக்மெயில் முறையை பின் பற்ற ஆரம்பித்திருப்பார்கள். அல்லது அடக்குமுறை மூலம் இதை அடக்கி இருந்தாலோ ஏற்கனவே அரசியல்வாதிகளின் மீது கோவத்தில் இருக்கும் மக்கள் மேலும் அந்நியப்பட்டுப் போயிருப்பார்கள். ஆக எதற்கும் இடம் கொடுக்காமல் இரண்டு பேரும் இறங்கி வந்தது பாராட்டுக்குரியது.

Saturday, August 20, 2011

காங்கிரஸ் - அன்னா ஹசாரே. ஜெயிக்கப்போவது யாரு?


காங்கிரசுக்கும் அன்னா ஹசாரே டீமுக்குமான மோதல் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. இனி நிமிடத்துக்கு ஒரு செய்தி வரும். `காங்கிரஸ் பணிந்தது` என்றோ அல்லது `அன்னாவின் சாயம் வெளுத்தது` என்றோ பலவிதமான அர்த்தங்கள் அதற்கு கொடுக்கப்படும்.  உண்மையில் இதில் யார் ஜெயித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள நாம் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த போராட்டத்தையும்,  இனி  என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் ஓரளவு ஆராயலாம்.

அன்னா ஹசாரேவையும் அவருடைய போராட்டத்தையும் அலசும் முன் இந்த உதாரணத்துக்கு போய் வருவோம். ஏனென்றால் சில விஷயங்களை உதாரணங்களோடு சொன்னால்தான் புரியும்.

Saturday, August 13, 2011

வைதீஸ்வரன் கோவில் -அரசு பேருந்துகள் - பிச்சைக்காரர்கள்


வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றபோது கவனித்த விஷயங்களை ஒரு பதிவாக போடுவோம் என்று எழுத ஆரம்பித்தால், அது ஆரம்பத்திலேயே சிறை அனுபவத்தை ஞாபகப்படுத்தியது. எனவே அது குறித்த சில பதிவும் போட்டாயிற்று. இனி நான் கவனித்த மற்ற விஷயங்கள்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்ஸை தேடும்போதே எனக்கு அரசுத் துறைகளின் மீது கோவம் வர ஆரம்பித்தது. தகவல்கள் தெளிவாக இல்லாததால் நம்மால் சரியாகத் திட்டமிடவும் முடியவில்லை, கூடவே அலைச்சலும். அதுதான் எனது கோவத்தின் காரணம்.

Saturday, August 6, 2011

சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு..part.2


சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு..part 1

இந்த பயணத்தில் மற்ற விஷயங்களை தொடும் முன் சிறை அனுபவத்தில் மேலும் சில விஷயத்தை பார்த்துவிடுவோம்.

ஏதாவது ஒரு விசேஷத்துக்கு அல்லது ஒரு முக்கிய நிகழ்வுக்காக நமக்கு அழைப்பு வந்தால், வருவோம் என்றோ அல்லது வர முடியாத சூழ்நிலையையோ நாம் அவர்களுக்கு தெரிவித்துவிடுவோம். அப்போதுதான் அவர்கள் அதற்கு தகுந்தாற் போல் திட்டமிட முடியும். ஆனால் நீதி மன்றத்தில் இந்த நாகரீகம் கடைபிடிக்கப்படுவதில்லை.