!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, December 30, 2011

லோக்பால் என்ற நாடகமும் சில கதம்ப செய்திகளும்

ரெண்டு நாளா பயங்கரமான லோக்பால் என்ற காமெடி படம் பார்த்தோம். காங்கிரஸ் இதை எப்படியாவது பாஸ் பண்ணிடும் என்று நான் நினைக்க, ஆனால் தொடர்ந்து நடந்த காட்சிகள் இது காங்கிரசின் டிராமா என்பதை உணர்த்திவிட்டது. ஆக படம் முடிந்துவிட்ட நிலையில், இனி நாம் கருத்து சொல்லலாம்.

இப்போதைக்கு லோக்பால் என்ற வீல் ஒரு வழியாக சுத்த ஆரம்பித்திருப்பது உண்மை. இது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா போல் முடங்கிவிடும் என்று சொல்வதெல்லாம் சாத்தியமில்லை. அடுத்த ஆண்டு ஏதோ கொஞ்சம் பலத்துடன் இது சட்டமாகும் வாய்ப்புதான் அதிகம். இந்த சட்டம் 40 வருடங்களாக தூங்கியது அபத்தம் என்றால், தற்போது திடீரென்று சட்டமாக்க முயற்சிப்பதும் அபத்தம்தான். காங்கிரசின் இந்த திடீர் வேகத்தின் காரணம் அன்னா மற்றும் வரவிருக்கும் தேர்தல்தான்.

Monday, December 26, 2011

யுவர் ஹானர், நீங்கள் முட்டாள்கள்தான்! அதாவது அரசு அப்படித்தான்...

இந்த பதிவை ஆரம்பித்ததே எனது சிறை அனுபவங்களையும், நமது சட்ட அமைப்பில் நான் கவனித்த குறைகளை எழுதவும்தான். ஆனால் பல காரணங்களால் அந்த ஆர்வம் குறைந்து போனது. முக்கியமாக அவ்வப்போதைய பரபரப்பான அரசியல் என்னை அங்கே இழுத்துப் போக, எழுத வேண்டும் என்று நினைத்த பல பதிவுகள் எண்ணத்திலேயே இருக்கிறது. இந்த முறை அந்த எண்ணங்களில் ஓன்று பதிவாக.

அரசியல் என்ற துறையை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தாலே போதும், அன்றாட பரபரப்பு செய்திகள் உங்களை பல துறைகளை ஆராய வைக்கும். சில மாதங்களுக்கு முன் அணுசக்தி குறித்த ஆராய்ச்சி என்றால், இப்போது அணைகள் குறித்த ஆராய்ச்சி. இவை அவ்வப்போது மாறினாலும், அரசியலோடு எப்போது தொடர்புடையது பத்திரிகை துறையும், நீதித்துறையும். எனவே அதை கவனிக்காமல் இருக்கவே முடியாது.

Saturday, December 17, 2011

முல்லைப் பெரியாறும், நாட்டை நாசமாக்கும் எழவு (தியரி)அரசியலும்.


எப்படியும் வாரம் ஒரு பதிவு போட்டு கொஞ்சம் ப்ரொபெஷனலாக மாறுவோம் என்று முயற்சித்தால் அது முடியவில்லை. இந்த வாரம் பிராட்பேண்ட் தலைவலி கொடுத்துவிட்டது. எனவே தகவலுக்காக தமிழக செய்திகளையே நம்ப வேண்டி இருந்தது. தேசிய சேனல்களுக்கோ இது பல முக்கிய செய்திகளில் ஓன்று.   

இங்கே முல்லைப் பெரியாறு அணை குறித்த விவாதங்களையும், செய்திகளையும் கவனித்ததில் எனக்கு ஜெப்ரி ஆரச்சரின் ஒரு சிறுகதைதான்  ஞாபகத்துக்கு வந்தது. ஒரு வழக்கில் ஒரு வக்கீல் தனது சார்பாக ஒரு சாட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தி அவருடைய அருமை பெருமைகளை சொல்லி, `இப்படிப்பட்ட ஒரு நபரின் கருத்தை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்` என்பார். ஆனால் அதே சாட்சி வேறு ஒரு வழக்கில் எதிர் தரப்புக்காக ஆஜராகும்போது, பல வாதங்களின் மூலம் `இப்படிப்பட்டவரின் கருத்தையா நீதிமன்றம் மதிக்கவேண்டும்` என்று எதிர் கேள்வி கேட்பார். இன்றைய அரசியல் அப்படித்தான் இருக்கிறது.

Monday, December 5, 2011

முல்லைப் பெரியாறு பிரச்சினை, என்ன செய்யலாம்?


முல்லைப் பெரியாறு அணைதான் தற்போதைய தலைவலி. இந்த பிரச்சினையை அலசும் முன் ஒரு அனுபவம்.

ஒரு ரயில் பயணம். (பம்பாயிலிருந்து அகமதாபாத்தோ அல்லது இங்கேயிருந்து அங்கேயோ) அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் அநியாயத்துக்கு கூட்டம். டாய்லெட்டில் கூட சில வியாபாரிகள் மூட்டைகளை அடுக்கி இருந்ததை கவனித்தேன். கூட்டம் நடை பாதையிலேயே உட்கார்ந்திருந்தது. அதிலும் ஒருவர் ஏற முயற்சிக்கிறார். ஆனால் வழியில் உட்கார்ந்திருப்பவர்கள் அனுமதிக்கவில்லை. உள்ளே இடமில்லை என்கிறார்கள். அவர் காட்டு கத்தல் கத்துகிறார். நானும் டிக்கட் வாங்கி இருக்கிறேன் என்று உரிமை கீதம் பாடுகிறார். கடைசியில் அவருடைய கத்தலை சமாளிக்க முடியாமல் அவருக்கு வழி விடுகிறார்கள். அவரும் அந்த நெருக்கடியில் பயணிக்கிறார்.

Monday, November 28, 2011

முறையற்ற மதப் பிரச்சாரம்.


இந்த வாரம் எனக்கு கோபத்தை வரவழைத்தது சில கிறிஸ்துவ பிரச்சாரகர்களின் செயல்கள். ஒரு பள்ளிக் கூடத்தின் முன் சிறுவர்களிடம் மத புத்தகங்களை வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். மதப் புத்தகங்களை விநியோகிப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் சிறுவர்களிடம் இதை விநியோகிப்பதை நான் நேரடியாக பார்த்தது இப்போதுதான்.

ஆன்மீகத்தை பொறுத்த வரையில் நான் மதில் மேல் பூனை. நிச்சயம் தீவிர மத ஆர்வம் கிடையாது. ஆரம்பத்தில் கம்யுனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் ஈடுபாடு காட்டி தீக்கதிரை சந்தா கட்டி வாங்கியும் படித்திருக்கிறேன், அப்படியே அந்த கட்சியின் ஒரு மாநில மாநாட்டில் தொண்டனாகவும் போயிருக்கிறேன். எனவே நாத்திகனாகத்தான் இருந்தேன். இருந்தாலும் கடலில் மூழ்குபவன் அந்த கடைசி நேர பயத்தில் `இறைவா` என்று கத்துவதில்லையா, அதுபோல் வந்ததுதான் பக்தி. அதன் பிறகு இப்படியும் அப்படியும் தடுமாறி நான் இப்போது எந்த பக்கம் என்றே தெரியாத நிலை.

அதே சமயம் இது மத ஆர்வத்தினாலோ அல்லது எது உயர்ந்த மதம் என்ற ஆராய்ச்சிக்கான பதிவோ இல்லை. நான் கண்ட ஒரு காட்சி லாஜிக்கோடு ஒட்டாமல் அயோக்கியத்தனம் என்ற எல்லையையும் தொடுவதால்தான் இந்த பதிவு.

Monday, November 21, 2011

கூடங்குளம் யாருக்கான திட்டம்?


கூடங்குளம் இப்போதைக்கு என்னையும் விடாது போலிருக்கிறது. முந்தைய பதிவில் சில நண்பர்கள் பின்னூட்டத்தில் சில கருத்துக்களை முன் வைத்தார்கள். உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அதற்கான பதில்தான் இது.

அப்படியே நான் இதையும் சொல்லிவிடுகிறேன். நான் அதிகம் எழுதுவதும் இல்லை, பேசுவதும் இல்லை. எழுதாததற்கு காரணம் சிறு வயதிலிருந்தே பிராக்டீஸ் இல்லாததாக இருக்கலாம். எனவே எழுதுவது என்பது எனக்கு தண்டனையை போன்றது. பேங்கில் சலான் எழுத எத்தனை வார்த்தைகள் எழுத வேண்டி இருக்கும்? அதற்கே எனக்கு கை வலிக்கும். எனவே நான் படிப்பது அதிகம், எழுதுவது குறைவு.

Monday, November 14, 2011

கூடங்குளம்: கேள்விகள் அங்கே, பதில் இங்கே.


சிறை தொடர்பான இரண்டு செய்திகள் பற்றி பதிவு எழுத நினைத்தால் வழக்கம் போல் ஏதோ ஓன்று நம் சிந்தனையை ஆக்கிரமித்து அது குறித்த பதிவில் போய் முடிகிறது. இந்த முறை மீண்டும் கூடங்குளமே என் சிந்தனை ஆக்கிரமித்திருக்கிறது.

முக்கியமாக நான் அதற்கு ஆதரவாளனாக இருப்பதால் (கவனிக்கவும், வேறு வழி இல்லாத நிலையில்) அதிகம் படிப்பது அதை எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைதான். அவர்கள் ஏதாவது ஆதாரமான கருத்தை முன் வைக்கிறார்களா என்று கவனிப்பேன்.

Thursday, November 10, 2011

ஏழாம் அறிவிடம் தப்பினேன், வேலாயுதத்திடம் மாட்டிக் கொண்டேன்.


ஒரு காலத்தில் சினிமா என் டென்ஷனை குறைக்கும் மருந்தாக இருந்தது. என்னை டெண்ஷனாக்குவதில் சாப்பாட்டுக்கும் முக்கிய பங்கிருப்பதால், இது உச்சக்கட்டத்தை அடையும் போது அதை தணிக்க நான் செய்வது இரண்டுதான். ஓன்று, அன்று ஓட்டலுக்கு போய் வயிறு வெடிக்கும் அளவுக்கு திருப்தியாய் சாப்பிடுவது. இரண்டு, நல்ல சினிமா பார்ப்பது.

கடலூரில் நான் மினி லைப்ரரி வைத்திருந்ததால், முக்கியமான வார இதழ்கள் அனைத்தும் வாங்கிவிடுவேன். எனவே விமர்ச்சனம் படித்துவிட்டுதான் பெரும்பாலும் போவேன். இருந்தாலும் சில சமயம் திடீர் முடிவோடும் போவதுண்டு. கடலூரில் அனைத்து தியேட்டரும் பஸ் ஸ்டான்ட் சுற்றியே இருப்பதால், வண்டியில் அப்படியே எல்லா தியேட்டரையும் சுற்றி வருவேன். கூட்டம் அதிகமாக இருந்தால் அது நல்ல படம் என்ற தியரியை நம்பிப் போவேன். அதிலும் ஏமாறுவது உண்டு. சில சமயம் என் சிந்தனையும், ரசனையும் மக்களோடு ஒத்துப் போகாது.

Monday, November 7, 2011

இந்த ரியல் எஸ்டேட்டுக்கு ஆப்பு வைங்கப்பா!

அணு உலை விபத்தை பற்றி கவலைப்படுகிறார்கள், ஊழலை பற்றி கவலைப்படுகிறார்கள், ஆனால் இதை விட மிகப்பெரிய ஆபத்தான மக்கள் தொகை பெருக்கத்தை பற்றியோ, அது நமக்கு கொடுக்க இருக்கும் பலவிதமான தலைவலிகளை பற்றியோ யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. சில வியாதிகள் கண்ணுக்கு தெரியும்,விகாரமாகவும் இருக்கும். வெளிப்படையாக தெரிவதால் நாம் அதை பற்றித்தான் அதிகம் கவலைப்படுவோம். இருந்தாலும் அவற்றை குணப்படுத்த மருந்து இருக்கும். ஆனால் பெரும்பாலான உயிர்க் கொல்லி நோய்கள் கண்ணுக்கு தெரிவதும் இல்லை அவற்றுக்கு மருந்தும் இல்லை. அவை மெல்லக் கொல்லும் விஷங்கள்.

மக்கள் தொகை பெருக்கமும் அது போன்ற வியாதிதான். இதனால் நாடு சந்தித்துக் கொண்டிருக்கும், சந்திக்கப் போகும் தலைவலிகளை பட்டியலிட்டால் அது நீளும். இன்று நாம் அணுமின் நிலையங்களை நாடுவதிலிருந்து, நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது வரை, அதோடு கொஞ்ச நாளாக எனக்கு தலை வலிப்பது வரை அனைத்துக்கும் மூலகாரணம் இதுதான். அதில் இப்போது புதிதாக ஒரு திருகுவலி வந்திருகிறது. விவசாய நிலங்களை எதற்கும் பயன்தராத மனைகளாக்கி பாழாக்குவதுதான் அது.

Monday, October 31, 2011

கூடங்குளம்: இங்கேயும் சில அன்னா ஹசாரேக்கள்


இதை தினமலருக்காக (இது உங்கள் இடம்) கொஞ்சம் சுருக்கி எழுதினேன். இங்கே இன்னும் கொஞ்சம் விளக்கமாக...


சில வாரங்களுக்கு முன் அணுசக்தி குறித்த தகவல்களில் முழ்கி இருந்தேன். ஆனால் முதலில் என் கதையை போட்டுவிடுவோம் என்று முடிவெடுத்ததால் அதை பற்றி பதிவு எழுதவில்லை. கூடங்குளம் பிரச்சினை இன்னமும் கொதிக்கும் நிலையில் அது குறித்தும் ஒரு பதிவு.

அணுசக்தி விஷயமாக பல செய்திகளை படித்ததில் ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்பதை விட அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதில்தான் உங்கள் திறமை அடங்கியிருக்கிறது. ராமாயணத்தில் `கண்டேன் சீதையை` என்ற சொன்னதிலிருந்து, மகாபாரத்தில் `(யானை) அசுவத்தாமா மரணம்` என்று சொன்னது வரை அந்த வார்த்தைகளுக்கு பின் பல நோக்கங்கள் அடங்கி இருக்கிறது. சொல்வது உண்மை என்றாலும் அதை சொல்லும் விதத்தில் நாம் நமது விருப்பத்தை திணிக்கலாம். இந்த தியரி இந்த பதிவுக்கும் பொருந்தும். இருந்தாலும் பலதரப்பட்ட வாதங்களை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தால் உங்களால் உண்மையை கண்டுபிடித்துவிட முடியும். 

Tuesday, October 18, 2011

இந்த அரசியல்வாதியை (?) நீதிபதிகள் மன்னித்துவிட்டார்கள்.



போலீசார் என் பிடிவாதத்தை பார்த்துவிட்டு, என் மாமாவிடம் எப்படியோ ஒரு புகாரையும் வாங்கிக் கொண்டு, எனக்கு ஜெயிலை பற்றிய பயமுறுத்தல் மற்றும் அட்வைஸ் என அவர்கள் கடமையையும் செய்துவிட்டு என்னை புழலுக்கு அனுப்பினார்கள்.

சிறைக்கு சென்ற பிறகு பத்திரிக்கைகள் படிக்கும் வாய்ப்பே சில வாரம் கிடைக்காததால், இந்த செய்தி பத்திரிக்கையில் வந்ததா இல்லையா என்றே எனக்கு தெரியவில்லை. என்னை பார்க்க வந்த உறவினர்களிடம் ஆர்வமாக விசாரித்தால், `இப்படி ஒரு ஆசை வேற உனக்கு இருக்கா?` என்று எதிர் கேள்வி. அப்படியே மாமா நன்றாகத்தான் இருக்கிறார் என்றும் தகவல். நான் உள்ளே வரவேண்டும் என்ற எனது நோக்கம் நிறைவேறிவிட்டது. எனவே இனி அது எனக்கு நல்ல செய்திதான். ஆனால் என்னைப்பற்றி பத்திரிக்கைகளில் செய்தி வராததுதான் எனக்கு ஏமாற்றம்.

Tuesday, October 4, 2011

நான் நடத்திய பத்திரிகையும், `நான் தமிழன்` ஜோக்கும்.



கூடங்குளம் பிரச்சினை சம்பந்தமாக இணையத்தில் ஒரு செய்தியை படித்தேன். அது குறித்து பதிவு போடும் எண்ணம் இல்லை. இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட புள்ளிவிவரம் என்னை குழப்பியதால்,மீண்டும் படிக்க நினைத்தேன். ஆனால் எங்கே படித்தேன் என்பது மறந்துவிட்டது. கூகுளில் `அணுசக்தி` என்று கொடுத்து தேடினாலும் கிடைக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் `Indian nuclear energy` என்று கொடுத்து தேடினால், அது கடலை காட்டியது. பின்னர் அதில் பல வடிகட்டிகளை பயன்படுத்தி ஓரளவுக்கு எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்.

சில நாட்கள் இப்படி தகவல்களில் மூழ்கி கிடந்ததில், ஆங்கிலம் என்ற மொழியின் அருமையும், இணையம் ஒரு கடலாக இருந்தாலும் அதில் ஆங்கிலம் என்ற மொழியின் அவசியத்தையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. அப்படியே இதை கற்றுக் கொள்ள நான் எடுத்த விடா முயற்சியும் நினைவுக்கு வந்தது.       

Tuesday, September 20, 2011

ஒரு நீதிக் கதை, ஒரு விளக்கம், ஒரு ஜோக்ஸ்.


இந்த கதையை ஒரு கென்ய பத்திரிகையில் படித்தேன். அரசியல்வாதிகளும், பிரபலமான மனிதர்களும் படிக்க வேண்டிய கதை. நீதிக் கதைகள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. இதையே நீங்கள் வேறு விதமாகவும் படித்திருக்கலாம். இருந்தாலும் நீதி கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். எனவே படியுங்கள்.

கென்யாவும் ஜனநாயக நாடு என்பதால், அங்கேயும் அரசியல்வாதிகளின் மீது ஊழல் புகார். அங்கே ஒரு கட்டுரையாளர் அவருடைய அரசியல் விமர்சனத்தில் இந்த கதையை சொன்னார்.

Tuesday, September 13, 2011

வெல்கம் பிஜேபி!


இது (பரபரப்பில்லாத) கிரிக்கெட் சீசன். கிரிக்கெட்டில் அவ்வவப்போது நமது கதாநாயகர்கள் மாறுவார்கள். உண்மையில் கிரிக்கெட்டில் நாம் எந்த ஒரு தனி நபர்களையும் துதி பாடுவதில்லை. அவர்கள் பார்மில் அடித்து ஆடும்போது தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவோம். சரியாக விளையாடாமல் கட்டை போட்டால், `அவுட்டாகித் தொலையேன்` என்று சபிப்போம்.

நாட்டிற்கு வெற்றியையும், பெருமையையும் தேடித்தருகிறார்கள் என்ற வகையில்தான் நாம் இவர்களை ஆதரிக்கிறோம். அவர்களால் நமது அணிக்கு பலம் இல்லை எனும்போது அவர்கள் புறக்கனிக்கப்படுவதையே விரும்புவோம். எனது அரசியல் நிலைப்பாடும் அந்த வகையை சேர்ந்ததுதான். மன்மோகன் சிங் என்ற நேர்மையான பொருளாதார நிபுணர் நம் நாட்டின் பிரதமராக வந்தபோது, இவரால் நாடு வளர்ச்சி பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதுவும் செய்ய இயலாமல் இவர் பொம்மையாய் இருப்பதை பார்க்கும் போது இவர் போய் சேர்ந்தால் தேவலை என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது.

Wednesday, August 31, 2011

அன்னா ஹசாரேவின் போராட்டத்தினால் கிடைத்த லாபம் + நஷ்டம்


இரண்டாவது சுதந்திரப் போர் (?) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் யார் ஜெயித்தார்கள் என்று ஆராய்ச்சி செய்யாமல் ஜனநாயகம் ஜெயித்தது என்றே சொல்வோம்.  அரசு அன்னாவின் மிரட்டலுக்கு பணிந்தும் போகவில்லை, அதேசமயம் மீண்டும் ஒரு முறை அவரை கைது செய்து அவருடைய உண்ணாவிரதத்தை முறியடிக்காமல் யதார்த்தமாகவும் செயல்பட்டிருகிறது.

அன்னாவின் மிரட்டலுக்கு அரசு பணிந்து போயிருந்தால் பலர் இந்த பிளாக்மெயில் முறையை பின் பற்ற ஆரம்பித்திருப்பார்கள். அல்லது அடக்குமுறை மூலம் இதை அடக்கி இருந்தாலோ ஏற்கனவே அரசியல்வாதிகளின் மீது கோவத்தில் இருக்கும் மக்கள் மேலும் அந்நியப்பட்டுப் போயிருப்பார்கள். ஆக எதற்கும் இடம் கொடுக்காமல் இரண்டு பேரும் இறங்கி வந்தது பாராட்டுக்குரியது.

Saturday, August 20, 2011

காங்கிரஸ் - அன்னா ஹசாரே. ஜெயிக்கப்போவது யாரு?


காங்கிரசுக்கும் அன்னா ஹசாரே டீமுக்குமான மோதல் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. இனி நிமிடத்துக்கு ஒரு செய்தி வரும். `காங்கிரஸ் பணிந்தது` என்றோ அல்லது `அன்னாவின் சாயம் வெளுத்தது` என்றோ பலவிதமான அர்த்தங்கள் அதற்கு கொடுக்கப்படும்.  உண்மையில் இதில் யார் ஜெயித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள நாம் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த போராட்டத்தையும்,  இனி  என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் ஓரளவு ஆராயலாம்.

அன்னா ஹசாரேவையும் அவருடைய போராட்டத்தையும் அலசும் முன் இந்த உதாரணத்துக்கு போய் வருவோம். ஏனென்றால் சில விஷயங்களை உதாரணங்களோடு சொன்னால்தான் புரியும்.

Saturday, August 13, 2011

வைதீஸ்வரன் கோவில் -அரசு பேருந்துகள் - பிச்சைக்காரர்கள்


வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றபோது கவனித்த விஷயங்களை ஒரு பதிவாக போடுவோம் என்று எழுத ஆரம்பித்தால், அது ஆரம்பத்திலேயே சிறை அனுபவத்தை ஞாபகப்படுத்தியது. எனவே அது குறித்த சில பதிவும் போட்டாயிற்று. இனி நான் கவனித்த மற்ற விஷயங்கள்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்ஸை தேடும்போதே எனக்கு அரசுத் துறைகளின் மீது கோவம் வர ஆரம்பித்தது. தகவல்கள் தெளிவாக இல்லாததால் நம்மால் சரியாகத் திட்டமிடவும் முடியவில்லை, கூடவே அலைச்சலும். அதுதான் எனது கோவத்தின் காரணம்.

Saturday, August 6, 2011

சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு..part.2


சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு..part 1

இந்த பயணத்தில் மற்ற விஷயங்களை தொடும் முன் சிறை அனுபவத்தில் மேலும் சில விஷயத்தை பார்த்துவிடுவோம்.

ஏதாவது ஒரு விசேஷத்துக்கு அல்லது ஒரு முக்கிய நிகழ்வுக்காக நமக்கு அழைப்பு வந்தால், வருவோம் என்றோ அல்லது வர முடியாத சூழ்நிலையையோ நாம் அவர்களுக்கு தெரிவித்துவிடுவோம். அப்போதுதான் அவர்கள் அதற்கு தகுந்தாற் போல் திட்டமிட முடியும். ஆனால் நீதி மன்றத்தில் இந்த நாகரீகம் கடைபிடிக்கப்படுவதில்லை.

Saturday, July 30, 2011

எரிபொருள் சிக்கனம் - சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு...


இந்த வாரம் ஒரு காது குத்தும் நிகழ்சிக்காக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போக வேண்டி இருந்தது. ஆனால் நான் கோவிலுக்கு போவதில்லை என்ற முடிவோடு இருக்கிறேன்.

அறிவியல் சார்ந்த புத்தகங்களையும், பிரபஞ்சம் மற்றும் பல தியரிகளையும் படிக்கும் போது கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கான காரணங்கள் தெரியவில்லை. அதேசமயம், `நீ என்ன செய்தாய் எனக்கு, நான் உன்னை மதிப்பதற்கு` என்ற எனது கோவமும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

Sunday, July 17, 2011

ஒரு கோடி பரிசு !


எனக்கு நுனி நாக்கில் ஒரு ஓரமாக கொஞ்சம் கருப்பாக இருக்கும். மச்சமோ என்னவோ? எனவே சிலர், `அய்யய்யோ... உன்னை பகைச்சிக்க கூடாதப்பா. நீ எது சொன்னாலும் பலிக்கும்` என்று சொல்லுவார்கள். அது உண்மையோ, பொய்யோ, ஆனால் நான் இதற்கு முந்தைய பதிவில் ஒரு உதாரணத்துக்கு சொல்லியிருந்தேன், தீவிரவாதிகள் குண்டு வைத்து விளையாடுவதற்காகவே உருவான நகரம்தான் மும்பை என்று! நான் அப்படி சொல்லி சில நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் தீவிரவாதிகள் மும்பையில் மீண்டும் குண்டு வைத்து விளையாடிவிட்டார்கள்.

Tuesday, July 12, 2011

இந்தியாவில் தமிழனுக்கு மரியாதை இல்லையா?


யுத்தம் முடிந்துவிட்ட நிலையில், இனப்படுகொலைக்காக இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவும்,  ராஜபக்சேவை தண்டிக்கவும் ஈழத்தமிழர்களோடு இந்திய தமிழர்களும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் போர்ராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற போராட்டங்கள் சர்வதேச சமூகத்தை தூண்டிவிட அவசியம் தேவை. எனவே இதை நாம் வரவேற்போம், முடிந்த வரை உதவுவோம்.

ஆனால் இவர்கள் அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களுக்கு மட்டும்தான் தமிழுணர்வு இருப்பது போலவும் மற்றவர்கள் எல்லாம் தேசியம் என்ற பெயரில் இந்தியாவில் தமிழனுக்கு ஏற்படும் அவமானத்தை கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டும் போது, அது நமது பொறுமையை கடுமையாக சோதிக்கிறது.

Sunday, July 10, 2011

நீங்க இந்தியாகாரங்க, உங்க நாட்டை விட்டுகொடுக்க மாட்டீங்க....

சிறையில் நான் முதல் எட்டு மாதம் தொடர் குற்றவாளிகளின் பிளாக்கில் இருந்தேன். பின்னர் வேறு பிளாக் மாறிவிட்டேன். இந்த பிளாக்கில் நான் போய் சேர்ந்தது இலங்கை தமிழர்களுக்கான செல்லில். இங்கே நான் ஒன்றரை வருடம் இருந்தேன். இந்த செல்லில் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் இலங்கைத் தமிழராக, போதை பொருள் கடத்தல் வழக்கில் உள்ளவராக அல்லது வசதியானவராக இருக்க வேண்டும். நான் இந்த மூன்றும் கிடையாது. இருந்தாலும் சிறை நூலக உதவியாளர் (ஈழத் தமிழர்) இந்த செல்லில் இருந்ததால், அவருடைய நட்பால் நான் இங்கே வந்து சேர்ந்தேன்.

Friday, June 24, 2011

காங்கிரசுக்கு ஓய்வு கொடுப்போம்


அரசியலில் தற்போது மிகவும் முட்டாள்தனமான செயல் எதுவென்றால் காங்கிரசுக்கு ஆதரவாக வாதாடுவதுதான். அதுவும் தமிழகத்தில்... கேட்கவே வேண்டாம். எனவே மன்மோகன் சிங் மற்றும் காங்கிரசின்  மேல்மட்ட தலைவர்களுக்கு ஆதரவாக ஒரு பதிவைப் (காங்கிரசின் ஊழல் ஆதரவும்... )  போட ஆரம்பத்தில் எனக்கு தயக்கம் இருந்தது. இந்த பதிவில் சொன்ன கருத்தில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லி எதற்கு வாங்கி கட்டிகொள்வானேன் என்று நினைத்தேன். இருந்தாலும் பி ஜே பி யை பிடிக்காதவர்கள் கூட வாஜ்பாய் மீது மரியாதை வைத்திருந்ததை போல், மன்மோகன் சிங் மீது எனக்கிருந்த மரியாதை அப்படி ஒரு பதிவைப் போட தூண்டியது.

Thursday, June 16, 2011

காங்கிரசின் ஊழல் ஆதரவும், தமிழக மக்களின் அம்மா ஆதரவும்... !

மாமியார் உடைச்சா மண் குடம், மருமகள் உடைச்சா பொன் குடம். இது மனிதர்கள் எந்த ஒரு பிரச்சினையையும் எப்படி அணுகுகிறார்கள் என்பதை புரியவைக்க சொல்லப்படும் வார்த்தை. மாமியார்கள் மட்டுமில்லை, பெரும்பாலான மனிதர்கள் பிரச்சினைகளை அணுகும் விதம் இப்படித்தான்.

கடந்த பதிவில் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் ஊழலை ஆதரிப்பவர்கள் இல்லை என்று சொல்லி இருந்தேன். ஆனால் இந்தியா இதுவரை கண்ட ஊழல்களில் பெரும்பாலானவை காங்கிரசுடன் தொடர்புடையவை. இப்போது வெளிவந்திருக்கும் பிரபலமான ஊழல்களிலும் காங்கிரஸ்காரர்களின் தொடர்பு இருக்கிறது அல்லது அவர்களின் ஆட்சியில் நடந்திருக்கிறது. எனவே மேம்போக்கான பார்வையிலேயே சொல்லிவிடலாம் காங்கிரஸ் என்றாலே ஊழல்தான் என்று!

Monday, June 6, 2011

இந்தியாவில் ஊழலை குறைக்க ஒரு வழி.


கடந்த பதிவில் அரசியல் (தனி) நீதிமன்றங்கள் அமைத்து அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கினால், அது அரசியலில் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்று கூறியிருந்தேன். ஆனால் அது வருகிறதோ இல்லையோ, லோக்பால் மத்திய அளவில் வருவதற்கான வாய்ப்பு தெரிகிறது. எனவே இது வந்தாலும் பரவாயில்லை என்று திருப்திபட வேண்டியதுதான். இருந்தாலும் ஆபத்தான அரசியல்வாதிகளை கீழ்மட்டத்திலேயே கண்டுபிடித்து (தனி நீதிமன்றங்கள் மூலம்) களை எடுப்பதை விட்டு விட்டு அவர்களை மேல்மட்ட தலைவர்களாக வளர விட்டு அதன் பிறகு அவர்கள் மீதான புகார்களை லோக்பால் மூலம் விசாரிப்பது என்பது தும்பை விட்டு விட்டு வாலை பிடிப்பதை போன்றதுதான்.

இன்னொருபக்கம்,தற்போதைய பரபரப்பான ஊழல்கள் ஒரு பக்கம் வருத்தத்தை அளித்தாலும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. `கறை நல்லது` என்ற வசனத்தை போல் நம் நாட்டை பொறுத்தவரையில் குறையும் நல்லதுதான். ஏனென்றால் ஏதேனும் குறையை கண்ட பிறகுதான் நாம் விழித்துக் கொண்டு போராடுகிறோம்.

Wednesday, May 25, 2011

கனிமொழி வழக்கு: ஓபனிங் நல்லா இருக்கும், ஆனால்...


அரசியல் என்றாலே அது ஒரு சாக்கடைதான் என்றாகிவிட்டது. இங்கே அரசியல்வாதிகள் மட்டுமின்றி அது குறித்து விமர்சிப்பவர்களும் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் தப்பிக்க முடியாது. ஒரு தரப்பின் குறைகளை விமர்சிக்க ஆரம்பித்தால் உடனே நீ `அந்த பக்கத்து ஆளா?` என்ற விமர்சனம் வந்துவிடுகிறது. விமர்ச்சனங்களை வீசும் போது யார் முன்னே (அதிகாரத்தில்) இருக்கிறார்களோ அவர்கள் மீதுதான் அதிகம் படும் என்ற யதார்த்தத்தை பலர் புரிந்துகொள்வதில்லை. தற்போது ஜெயலலிதா அதிகாரத்திற்கு வந்து விட்டதால் இனி இவர் இந்த யதார்த்தத்திற்கு உட்படுத்தப்படுவார்.

அதேபோல் ஒப்பிடுதலும் அரசியலில் தவிர்க்க முடியாத ஓன்று. கலைஞரையும் ஜெயலலிதாவையும் விமர்சிக்கும் போது `இவர் மட்டும் யோக்கியமா?` என்று எதிர்த்தரப்பையும் சேர்த்துதான் விமர்சிக்க வேண்டியிருக்கும்.

Tuesday, May 17, 2011

தேர்தல் முடிவுகளும், கனிமொழியின் கைது தள்ளிப் போவதன் காரணமும்.

தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. பல பதிவர்கள் தங்கள் கருத்துக்களை வேகமாக பகிர்ந்துகொண்டார்கள். தற்போது எனக்கு `அரசியல் பதிவர்` என்ற பட்டமும் பதிவுலகில் கிடைத்திருப்பதால் லேட்டானாலும் தேர்தல் முடிவுகள் குறித்து எனது கருத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால்  நான் எதிர்பார்த்தது `அரசியல்வாதி` என்ற பட்டத்தைத்தான். டாக்டராக, இன்ஜினீயராக, வக்கீலாக, கலெக்டராக அல்லது பணக்காரனாக வேண்டும் என்பதுதான் பலரின் கனவாக இருக்கும். ஆனால் அரசியல்தான் விவரம் புரியாத வயதிலிருந்து என் சிந்தனையை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது.ஜெயிலுக்கு போனால்தான் அதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று நினைத்த போது, அந்த முயற்சியையும் துணிந்து எடுத்தேன். சரி, என் கதையை இன்னொருநாள் பார்ப்போம். இனி அரசியல்..

Saturday, May 14, 2011

தேர்தல் முடிவுகள்: இது வலைபதிவு நண்பர்களுக்கு.

திமுகவை எதிர்ப்பதில் போராடிய நண்பர்களுக்கெல்லாம் இனிப்பை பகிர்ந்து கொள்ள ஆசை. அது சாத்தியமில்லாததால் இப்படி.
    

இது திமுக படுதோல்வி அடைந்ததற்கு 

ஜனநாயக நாடுகளின் சர்வாதிகாரமும், சர்வாதிகாரிகள் விரும்பும் ஜனநாயகமும்.



தீவிரவாதப்பாதையில் செல்பவர்களால்  தங்கள் நோக்கத்தை அடையவும் முடியாது அதேசமயம் அவர்களுக்கு அழிவும் நிச்சயம் என்பதை ஒசாமாவின் மரணம் உறுதிப்படுத்துகிறது.

ஒசாமா விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்திய பிரதமர் நேர்மையானவராக இருந்தும் அவருடைய ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெறவில்லையா? தேர்தல் செலவினங்கள், கூட்டணி ஆட்சி என்று பல நிர்பந்தங்கள் இந்திய ஆட்சியாளர்களுக்கு இருகிறதே! அதேபோல் பாகிஸ்தான் அரசியலையும் நாம் கொஞ்சம் யதார்த்தமாக புரிந்து கொள்ள முயற்சிப்போம். அவர்களுக்கும் பல நிர்பந்தங்கள் இருக்கலாம்.  

தவறான பாதையில் சென்று விட்ட பிறகு, சினிமாவில் சில வில்லன்கள் திருந்துவது போல் திடீரென்று திருந்திவிட முடியாது. மாற்றங்கள் மெல்ல மெல்லத்தான் வரும். அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராகவோ அல்லது அமெரிக்காவின் கடந்த கால தேவைக்காகவோ இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்த்துவிட்ட பாகிஸ்தான், திடீரென்று அதை அறுத்துவிட முடியாது. விளைவுகள் மோசமாக இருக்கும். எனவே இருதரப்பையும் திருப்தி செய்யும் போக்கை பாகிஸ்தான் கடைப்பிடித்து வந்தது. ஆனால் எதற்கும் ஒரு முடிவு உண்டல்லவா, கடைசியில் அது வந்தேவிட்டது.

இந்த பதிவு ஒசாமா இறந்ததை பற்றி அல்ல. மேலும் பல ஒசாமாக்கள் உருவாகாமல் தடுப்பதை பற்றி.  

Monday, May 2, 2011

சிறை அனுபவம்: திரும்பி பார்க்கிறேன்.



நான் சிறையிலிருந்து விடுதலை ஆகி ஆறு மாதம் ஆகிவிட்டது. சிறைகள் குற்றவாளிகளை தண்டிக்காமல்/திருத்தாமல், அவர்களை வளர்த்து விட்டுகொண்டிருந்ததை பார்த்த போது இதைப்பற்றி நிச்சயம் எழுத வேண்டும் என்ற வெறி இருந்தது. இந்தியாவில் தப்பு செய்பவர்கள் தண்டிக்கப்படுவதே அபூர்வம். அப்படியே தண்டனை கிடைத்தாலும் அவர்கள் தண்டனை அனுபவிக்கும் விதம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே சிறையைப்பற்றி நாம் தெரிந்து கொண்டதை எழுதுவோம் என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

ஆனால் சிறையைப்பற்றியே எழுதிக் கொண்டிருந்தது எனக்கும் போரடித்தது. அத்துடன் தேர்தலும் வந்துவிட, எனது கவனம் அரசியல் பக்கம் திரும்பியது. எனவே அரசியல் குறித்தும் எனது பார்வைகளை பகிர்ந்துகொண்டேன். தற்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் எனது சிறை வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன். சிறை வாழ்கையில் எழுதுவதற்கு பல அனுபவங்கள் இருக்கிறது. அதில் ஓன்று இங்கே.

Tuesday, April 19, 2011

இந்திய ஜனநாயகம்: இந்த சீர்திருத்தம் மிகமிக அவசியம்.


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவிகிதம் கிட்டத்தட்ட எண்பதை தொட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது விழிப்புணர்வால் வந்த சதவிகீதமா, அல்லது பணம் பாதாளம் வரை பாய்ந்ததன் பலனா என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் தெரியும். 

காரணங்கள் எதுவாக இருந்தாலும் நாம் நல்லதையே நினைப்போம். தேர்தல் கமிஷனின் வேலை மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வகை செய்வதும், முறைகேடுகளை தடுப்பதும், பணம் சிலருக்கு சாதகமாகவும் மற்றவர்களுக்கு பாதகமாக இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான். அந்த வகையில் தேர்தல் கமிஷன் தன் கடமையை முடிந்த வரை முறையாகச் செய்துவிட்டது.

Tuesday, April 12, 2011

தேர்தல்: முட்டாள்களை அடையாளம் காண ஒரு வழி.

அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை முடித்து விட்டார்கள். இனி மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம். ஆனால் இப்போதும் சிலர், `ஆமா, இவங்க ஊழல் பண்ணி பணம் சம்பாதிப்பதற்கு நாம எதுக்கு ஓட்டு போடணும்?` என்று அபத்தமான வாதம் செய்கிறார்கள். இப்படி வாதம் செய்பவர்கள் படித்தவர்கள் என்பதுதான் கொடுமை. இதிலிருந்து ஓன்று தெரிகிறது. கல்வி அறிவு என்பது வேறு. பொது அறிவு என்பது வேறு என்று. இந்தியாவில் கல்வி அறிவு வளரும் வேகத்தில் பொது அறிவு வளரவில்லை. இவர்கள் ஓட்டு போடாததால் மிக மோசமானவர்கள் அதிகாரத்துக்கு வர வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை இந்த படித்த மேதாவிகளுக்கு யார் புரிய வைப்பது?

உங்கள்  மகனை ஒரு நல்ல தரமான கல்லூரியில் சேர்க்க விரும்புகிறீர்கள். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்காக நீங்கள் உங்கள் மகனை கல்லூரிக்கு அனுப்பமாட்டீர்களா என்ன? கிடைப்பதில் சிறந்ததை தேர்ந்தேடுப்பதுதானே நடைமுறை  வழக்கம். ஆனால் தேர்தலில் மட்டும் மக்கள் இது போல் சிந்திப்பதில்லை. காரணம், தன் மகனின் எதிர்காலத்தில் ஒரு வருடம் கூட பாழாகிபோகக்கூடாது என்று நினைப்பவர்கள், அப்படி ஒரு அக்கறையை தேசத்தின் மீது காட்டுவதில்லை.

Friday, April 8, 2011

அணு மின்சாரம்: நோகாமல் நுங்கு தின்ன முடியுமா?

இது ஒரு நேரம்கெட்ட பதிவு. அணு உலை விபத்திற்கு பிறகு, அதன் பாதிப்பை இன்னும் முழுதாக அலசமுடியாத நிலையில் , அணு உலைகளுக்கு ஆதரவாக யாரும் எழுத மாட்டார்கள்.  இருந்தாலும் கல்கியில் ஞாநி அவர்களின் அணுஉலைகள் பற்றிய `பிருமாண்டமான இலவசம் வருகிறது! உஷார் !!` என்ற கட்டுரையை படித்தவுடன் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று தோன்றியது. எனவே எழுதிவிட்டேன். 
   

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டு அணு மின் நிலையங்கள் விபத்தில் சிக்கிய பிறகு, இப்படி ஒரு ஆபத்தான பாதையில் நாம் போகவேண்டுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இன்றைய நமது தேவைக்காக பல தலைமுறைகளை சிக்கலில் விட்டுவிட்டு செல்ல நமக்கு உரிமை இருக்கிறதா என்ற கேள்வியெல்லாம் கேட்கப்படுகிறது.

நியாயமான கேள்விதான் இது. ஆனால், ஒரு ஊதாரி தகப்பனாக நாம் நமது பரம்பரை சொத்தை காலி பண்ணிவிட்டு, பிள்ளைகளை நிதி ஆதாரம் இல்லாமல் நடுத்தெருவில் விட்டுவிட்டு செல்லும் உரிமை மட்டும் நமக்கு இருக்கிறதா? இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது? ஏனென்றால் நாம் தற்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். தற்போதைய நிலைமையை அப்படியே தொடர்ந்தால், எதிர்கால சந்ததியருக்கு எரிபொருள் இல்லாமல் மாட்டுவண்டியும், கைவிசிறியும் கூடவே பூமியை வாழ முடியாத அளவுக்கு வெப்பமாகவும் மாற்றிவிட்டுப் போகப்போகிறோம்.

Friday, March 25, 2011

வைகோ, ஜெயலலிதா. யார் பாடம் கற்கவில்லை?




வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கும் முடிவை வைகோ எடுத்திருக்கிறார். இதற்காக வைகோ ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், இது ஒரு முட்டாள்தனமான அரசியல் தற்கொலைதான். இனி இவரை காணாமல் போன தலைவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டியதுதான்.

இந்த முடிவை எடுத்ததற்கான காரணங்களை குறிப்பிடும்போது, `ஜெயலலிதா மாறியிருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் மாறவில்லை` என்று குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டும் உண்மைதான். காலம் மனிதர்களுக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தும் என்பது யதார்த்தமான உண்மை. ஆனால் இங்கே ஜெயலலிதா மட்டுமின்றி வைகோவும் எதையும் கற்றுக்கொண்ட மாதிரி தெரியவில்லை.

Thursday, March 17, 2011

தமிழ்நாட்டில் காங்கிரசின் அரசியல் தற்கொலை!

எப்படியோ திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டுவிட்டது. இந்த கூட்டணி ஏற்படாமல் இருந்தால் நாட்டுக்கும் நல்லது, காங்கிரசுக்கும் நல்லது என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் என் ஆசையில் காங்கிரஸ் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது.

கூட்டணி உறுதியானாலும் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் ஒரு கேள்விக்கு இங்கே பதில் இல்லை. நம்மிடம் சொல்லப்படும் எந்த ஒரு செய்தியும் கோர்வையாக இருந்தால்தானே அதை நம்பமுடியும்? `இந்த தேர்தலில் திமுக தோற்றால், அம்மா ஒரு பக்கமும் 2 ஜி ஊழல் இன்னொரு பக்கமும் திமுகவை பந்தாடும் என்பதால், (இவர்களே உருவாக்கிக் கொண்ட) பல அவமானங்களை தாங்கிக் கொண்டு திமுக காங்கிரசுக்கு பணிந்து போகிறது` என்ற செய்தி கோர்வையாக இருப்பதால், நம்மால் இதை நம்ப முடிகிறது.

Monday, March 7, 2011

கூட்டணி முறிவு.காங்கிரசுக்கு லாபமே அதிகம்!

காங்கிரஸ்-திமுக கூட்டணி உடைந்து விட்டது.உண்மையில் இது எனக்கும் சந்தோஷமான செய்திதான். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். நடந்துவிட்டது.

ஆனால் பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை வைத்து பலரும் தங்கள் விருப்பம் போல் அர்த்தம் கொடுத்துக் கொள்கின்றனர். ஒருவேளை நானும் அப்படி இருக்கலாம். இருந்தாலும் இது எனது அலசல்.

வெளிப்பார்வைக்கு திமுக ஏதோ  மிகத்திறமையாக செயல்பட்டு காங்கிரசின் மூன்றாவது அணி திட்டத்தை முறியடித்து விட்டதாவும், காங்கிரசை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டதாகவும் கருத்துக்கள் பரப்படுகிறது.  ஆனால் நிஜம்?

காங்கிரஸ் உண்மையிலேயே மூணாவது அணி அமைக்க முயற்சி செய்ததா?

Tuesday, March 1, 2011

சிறை அனுபவம்: (ஜீவி செய்தி) சிறையில் ராசா எப்படி இருக்கிறார் (இருப்பார்)?

ஆ.ராசாவை, அவரது மனைவி பரமேஸ்வரி பார்த்து சொன்ன செண்டிமெண்ட் வார்த்தைகளை கேட்டு ராசா கண்கலங்க, பரமேஸ்வரியும் அழுதுவிட்டாராம். கொசுக்கடியால் ஆரம்ப நாட்களில் தூங்க முடியாமல் தவித்தாராம் ஆ. ராசா. குளிர்காலம் என்பதால், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவதைப் போலவே ராசாவுக்கும் ஏழு போர்வைகளை ஜெயில் நிர்வாகம் வழங்கியது. அவற்றில் இரண்டை கீழே விரித்தும் இரண்டை தன் உடலில் போர்த்திக்கொண்டும் தூங்குகிறாராம். ஒன்றை தலைக்கு வைத்துக்கொள்கிறார்.

ஆ. ராசா அடைக்கப்பட்டுள்ள அறையில் ஜன்னல் கிடையாது. 15 -க்கு 10 என்கிற அளவுள்ளது. காலையிலும் மாலையிலும் ரோல்கால் நடக்கிறது. அப்போது மற்ற கைதிகளுடன் சேர்ந்து வரிசையில் நிற்கிறார். அந்த சமயங்களில் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த் பெஹுராவுடன் பேசுகிறார். ஆங்கிலப் பத்திரிக்கைகளை படிக்கிறார். தமிழ் பத்திரிகை கேட்டிருக்கிறாராம். அவரது அறையை சுற்றி மட்டும் வாக்கிங் போக அனுமதிக்கிறார்களாம்.

Sunday, February 13, 2011

ஈழத்தமிழர்களுக்கு ஒரு இந்தியத் தமிழனின் பகிரங்கக் கடிதம்.


ராஜ நடராஜன் said...  சிவா!உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.என்னை விட நேரடி வாழ்க்கை அனுபவங்கள் உங்களுக்கு இருந்தும் பிரபாகரன் என்ற சொல்லையும் தாண்டிய ஒரு போராட்டத்தின் மையப்புள்ளி பற்றி அலசாமலும் ஈழப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகராமலும் குற்றம் சொல்லல் என்ற எல்லையிலே நீங்கள் நிற்பதால் உங்கள் மொழி... வார்த்தை விளையாட்டை நிறுத்திக்கொள்கிறேன்.நன்றி

இது ஈழம் குறித்த ஒரு பதிவின் விவாதத்தில் ஒரு ஈழத்தமிழர் கடைசியாக போட்ட பின்னோட்டம். அவர் சில குற்றச்சாட்டுகளோடு இந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டார். ஆனால் என்னால் நிறுத்த முடியவில்லை. அவர் மட்டுமில்லை பல இந்திய, இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இதே உணர்வுதான் இருக்கும். எனவேதான் இந்த பதிவு.    

*****************************************************************


நண்பரே, ஈழத்தமிழனின் இன்றைய சோகமான நிலையில் நான் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சவில்லை. ஒரு தமிழன் தோற்று, அங்குள்ள தமிழர்கள் நடுத்தெருவில் நிற்பதை இங்குள்ள எந்த தமிழனும் விரும்பவில்லை. ஆனால், இந்தியாவை குறை சொல்லும் முன், உணர்ச்சிகளை தாண்டி நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். தவறு (அதிகம்) யார் பக்கம் என்பது புரியும். சிங்களவன் எப்படி வெற்றி பெற்றான் என்பது நமக்கு தேவையில்லாத ஓன்று. ஆனால் ஒரு தமிழன் ஏன் தோற்றான்? அதற்கு காரணங்கள் என்ன என்பதை நாம் அலசி ஆராய்ந்தால்தான், மற்றொரு ஈழப்போராட்டம் வரும்போது கவனமாக இருக்க முடியும்.

Sunday, February 6, 2011

சிறைக்குள் செல்போன்: அண்ணே.. இதை அனுப்பாதீங்கன்னே!


சிறைக்குள் கைதிகள் அதிக பயமில்லாமல் செல்போனை பயன்படுத்த காரணம் என்ன என்பதை நான் புரிந்து கொண்டவுடன், சிறைக்குள் போனின் அவசியத்தையும் மற்றும் சிறைக்குள் நடக்கும் குற்றங்களுக்குக்கான தண்டனையில் தேவைப்படும் சீர்திருத்தங்களையும் சுருக்கமாக எழுதி தினமலர் `இது உங்கள் இடம்` பகுதிக்கு அனுப்ப நினைத்தேன்.

எனது கடிதங்கள் தினமலருக்கு போகாது என்று தெரியும். இருந்தாலும், சிறையில் சும்மா இருக்க முடியாதல்லவா. எனவே இதை ஒரு பயிற்சியாக அவ்வப்போது எனது கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். அதேசமயம் என் கையெழுத்து ரொம்ப மோசம் என்பதால், எனது கடிதங்களை சிறை நண்பர் (போதை கடத்தல்) ஒருவர் எழுதித்தருவார். அவருடைய கையெழுத்து அழகாக இருக்கும்.

எனவே அந்த நண்பரை அழைத்து இந்த கடிதத்தையும் எழுதித்தரச் சொன்னேன். இதை படித்த அந்த நண்பர் அதிர்ச்சியாகி, ` அண்ணே.. இதை அனுப்பாதீங்கன்னே!` என்றார்.

Tuesday, February 1, 2011

சிறைகளில் செல்போன், தேவையற்ற வழக்குகள்- part 3



அந்த அபத்தத்தை படிக்கும் முன் உங்களிடம் சில கேள்விகள்.

நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். வழியில் ஒரு போலீஸ்காரரை யாரோ ரவுடிகள் வெட்டி குற்றுயிராய் போட்டுவிட்டு போய்விட்டார்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தந்து அது வரும்வரை காத்திருப்பீர்களா, அல்லது உங்கள் காரிலேயே அந்த போலீஸ்காரரை ஏற்றி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வீர்களா?



Friday, January 28, 2011

சிறைகளில் செல்போன் - அபத்தமான தண்டனை - part 2



சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டால் சிறை அதிகாரிகள் பெரும்பாலும் அதற்காக வழக்கு போட விரும்புவதில்லை. மிக அபூர்வமாகத்தான் வழக்கு பதிவு செய்யப்படும். காரணம். இவ்வளவு கடுமையான கண்காணிப்பையும் மீறி எப்படி செல்போன் உள்ளே வருகிறது என்று மக்கள் கேள்வி கேட்ப்பார்கள். மக்கள் கேட்டுவிட்டு போகட்டும். அவர்கள் கருத்தையெல்லாம் இப்போது யாரும் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், நீதிபதிகள் நேரடியாக கேள்வி கேட்டு நக்கலடிப்பார்கள். அவமானமாக இருக்கும்.

Wednesday, January 26, 2011

சிறை அனுபவம்: சிறையில் செல்போன் புழங்க காரணம் என்ன...part 1

சிறையில் அடிக்கடி செல்போன் கைபற்றப்படுவதாக வரும் செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். இதையெல்லாம் படிக்கும்போது சிறைத்துறையில் ஊழல் மலிந்து விட்டது, எனவேதான் கைதிகள் துணிச்சலாக செல்போனை பயன்படுத்துகிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இதுவும் ஒருவகையில் உண்மைதான். ஆனால் வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Tuesday, January 25, 2011

இனி நாம் தமிழன் என்று சொல்லவேண்டாம். தலை நிமிர்ந்து....


மீண்டும் தமிழக மீனவர் ஒருவர் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதை படிக்கும்போது என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. நான் தமிழன் என்றும் அதே சமயம் இந்தியன் என்றும் சொல்லி கொள்வதை பெருமையாகவே நினைக்கிறேன். ஆனால், இனி அதற்காக வெட்கப்படவேண்டும் போலிருக்கிறது.

Monday, January 17, 2011

சிறை அனுபவம்: லஞ்சம். சாரி, ராமகிருஷ்ணன்...

சில தவறுகளை செய்யத்தூண்டும் அல்லது அதை நியாப்படுத்த கூடிய காரணங்கள் இருக்கின்றன என்பதை நான் எனது சிறை அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். இதோ, எனக்கும் அப்படி ஒரு அனுபவம்...      

`நான் கோர்டுக்கு வருவேன். என்னை வந்து பாருங்கள்` என்று சிறை நண்பர் (கேரியர்) ஒருவர் மெசேஜ் சொல்லி அனுப்பியி ருந்ததால்,அவரை பார்க்க ஐகோர்ட் வளாகத்துக்கு சமீபத்தில் செல்ல நேர்ந்தது. அந்த நேரம் வனிதா விஜயகுமார் குடும்பநல கோர்ட்டுக்கு வந்தாரோ அல்லது கிளம்பி கொண்டிருந்தாரோ... பிளாஷ்கள்  மின்னி கொண்டிருந்தன.

Sunday, January 9, 2011

பொய் - சிறுகதை

அந்த ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இடம் தேடி அமர்ந்தான்.காலையில் சாப்பிடாததால் பசி அதிகமாயிருந்த்தது.

எல்லாம் நேற்று நண்பர்களுடன் சினிமாவுக்கு போனதால் வந்த வினை. `ஆபீஸில் ஓவர்டைம், வர லேட்டாகும்`  என்று ஜனனியிடம்  பொய் சொல்லியிருந்தான். ஆனால், சினிமாவில் ஊன்றி போனவன், கால் வந்ததை கவனிக்கவில்லை. ஆபீஸுக்கு அவள் எதேச்சையாக போன் போட... குட்டு வெளிப்பட்டுவிட்டது.