!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, November 29, 2010

சிறை அனுபவம்: குண்டர் (டுபாக்கூர்) சட்டம், சில விளக்கங்கள்

சமீபத்தில் ஆள் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று போலீசார் அறிவித்திருக்கின்றனர். அவ்வப்போது சில பரபரப்பான குற்றங்கள் நிகழ்வதும், அந்த நேரம் மக்களின் கோபத்தை தணிக்க, அல்லது உண்மையிலேயே குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக அவர்களின் மீது குண்டர் சட்டத்தை போலீசார் ஏவுவார்கள். ஆனால் எனது இரண்டரை ஆண்டுகால சிறை அனுபவத்தில் சொல்கிறேன், இந்த குண்டர் சட்டம் குற்றவாளிகளுக்கு அச்சுறுத்தலாகவும் இல்லை, இதனால் குற்றங்கள் குறையப்போவதும் இல்லை.

குண்டர் சட்டம் (சிறையில் இது மிசா ) ஒரு வருட தடுப்பு காவல் என்று சட்டம் சொல்கிறது. மக்களும் இதை நம்பிகொண்டிருக்கிறார்கள். ஆனால் இது செயல்படும் விதமே வேறு. குண்டர் சட்டம் ஒருவர் மீது பாய்ந்த மூன்று மாதத்தில் போர்ட் (Board) வந்துவிடும். இந்த நபர் மீது குண்டர் சட்டம் போட்டது சரிதானா என்று மூன்று நீதிபதிகளை கொண்ட குழு விசாரித்து அதை உறுதி செய்யும் அல்லது தள்ளுபடி செய்யும். இதுதான் போர்ட். பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் இங்கே உடைந்து விடும் அல்லது `உடைக்கப்பட்டு`விடும்.

Sunday, November 14, 2010

சிறை அனுபவம்: முதல் இரவு

என்னோட முதல் இரவு அனுபவம் கிட்டத்தட்ட உங்கள்ல பல பேரோட அனுபவம் மாதிரி தான் இருந்தது. அந்த இரவு எப்படி இருக்குமோன்னு நான் படபடப்பா இருந்தேன். ஆனா நான் பயந்த மாதிரி ஒன்னும் ஆவல. அந்த சூழ்நிலை எனக்கு திருப்தியாவே இருந்தது. நானும் அந்த இரவு முழுக்க சரியா தூங்கல. இரவு ஒரு நேரத்துல கண் முழிச்சி பார்த்து, ஒருவிதமான பொசிஷன பார்த்துட்டு, இப்படியெல்லாம்  மனுஷங்க ................ ஆச்சர்யப்பட்டேன்.

Friday, November 5, 2010

சிறை அனுபவம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.


சிறைக்கு சென்றவன் என்பதால் பரபரப்பான பல விஷயங்களை பற்றி நான் எழுதுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். நான் இங்கு பட்டும் படாமலும் சில விஷயங்களை குறிப்பிடுவேன். காரணம், சிறையில் நானாக எதையும் ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ளவில்லை. அடிப்படையில் நான் ஒரு தனிமை விரும்பி. நானும் ஒரு கைதி என்பதால் பல கைதிகள் தயக்கமின்றி என்னுடன் பேசியதால் தெரிந்து கொண்டவை.  சில சொந்த அனுபவங்களும் உண்டு. நான் எழுதிய கடிதங்கள் தினமலரில் வெளியான பிறகு `அண்ணே, இதைபற்றியும் நீங்க எழுதுங்கண்ணே` என்றும் சொன்னவை.

என் கதை:இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக...

இது `சிறை அனுபவம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.` பதிவின் தொடர்ச்சி. அதை படித்துவிட்டு இதை படிக்கவும்.

என் கதையை உங்களிடம் சொல்லுவதா, வேண்டாமான்னு நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஏனென்றால், சிறைக்கு போகும் முன்  நான் சில சபதங்கள்  எடுத்திருந்தேன். ஓன்று, இனிமேல் நான் என் பிரச்சினயைப் பற்றி யாரிடமும் சொல்லப் போவதில்லை. இரண்டு, இனிமேல் எந்த காரணம் கொண்டும் .............. ............. ............. வாழக்கூடாது என்று. இரண்டாவது சபதம் கிட்டத்தட்ட தோல்விதான். எனவே சுருக்கமாக  சில விஷயங்களை மட்டும் சொல்கிறேன்.