!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, June 22, 2023

இவர்கள் திருந்தமாட்டார்கள்


எழுதும் ஆர்வம் போய்விட்டது. ஆனாலும் இந்த நீதித்துறை கனவான்கள் செய்யும் அட்டூழியங்களை அவ்வப்போது படிக்க நேரும்போது அறச்சீற்றம் பொங்கிவிடுகிறது. இது அந்த வகை பதிவு.

சமீபத்தில் தமிழ்நாட்டு ஐபிஸ் ஆபிஸர் ராஜேஷ் தாஸ் சக பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்றிருக்கிறார். இதுதான் செய்தி. இதில் சந்தோசம் மற்றும் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் மிக விரைவாக 3 ஆண்டுகளிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

Wednesday, May 3, 2023

கர்நாடகா - இதை தவிர்க்கலாம்


கர்நாடகாவில் இந்த மாதம் தேர்தல் நடக்கப்போகிறது. இதில் என்ன புது தகவல் என கேட்கவேண்டாம். எனக்கு எதை படித்தாலும் அதில் ஒரு கோளாறு என் கண்ணுக்கு தெரியும். அந்த தகவல்தான் இங்கே.

அதாவது இந்த வருடம் சட்டமன்றம், அடுத்த வருடம் பரராளுமன்றம் தேர்தல் நடக்கப்போகிறது. அதுதான் இங்கே சிக்கல். காங்கிரஸாக இருக்கட்டும் அல்லது பிஜேபியாக இருக்கட்டும், இந்த சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக செலவு செய்து களைத்துப்போய், அடுத்த வருடம் மறுபடியும் அதே செலவு செய்யவேண்டும். இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?

Saturday, April 15, 2023

ஆருத்ரா மோசடி - இது அனாவசிய செலவு


ஆருத்திரா கோல்ட் மோசடியை படித்தவுடன் என்ன எழுதுவதென்றே புரியவில்லை, எனவே வாசிப்போடு நிறுத்திவிட்டேன். அதன்பின் பலவிஷயங்கள் அதை மறக்கடித்துவிட்டது. இருந்தாலும் இதில் எதேச்சையாக ஒரு பேட்டியை பார்த்துவிட, இதை குறிப்பிட்டே ஆகவேண்டும் என்ற உந்துதல் எனக்கு வந்துவிட்டது. அதற்காகத்தான் இந்த பதிவு 

Tuesday, February 21, 2023

ஒரு ஓட்டுக்கு ரூ .200


இவ்வளவுதான் கொடுக்கமுடியும். ` என்னய்யா இது ரொம்ப கம்மியா இருக்கு, நாட்டு நிலவரம் தெரியாம இருக்கியா?` என யாரும் கேட்டுவிடாதீர்கள். நான் சொல்ல வருவது, ஒட்டு போட வரும் எல்லா வாக்காளர்களுக்கு அரசாங்கம் 200 ரூபாய் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று.

உலகத்தில் எந்த நாடும் இப்படி செய்வதில்லையே என ஆச்சர்யப்படவேண்டாம். முதன்முதலில் மெதுவடை இட்லி மாதிரிதான் இருந்ததாம். அதில் எவனோ ஒருவன் ஓட்டையை போட்டு புதுமையை புகுத்தியிருக்கிறான். அதுபோல் இதுவும் உலக வரலாற்றில் புதுமை என இருந்துவிட்டு போகட்டும்.

Saturday, February 18, 2023

நிலைவித்வான் தலைவர்



கலைஞருக்கு பேனா நினைவுத்தூண் வைக்கவிருக்கும் செய்திகளை படிக்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஏனென்றால் அரசியலை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். சாதனைத்தலைவன் என சொல்லும் அளவுக்கு அவர் என்ன சாதித்தார் என தெரியவில்லை. ஒருவேளை எப்போதாவது நான் அசந்து தூங்கிய சமயம் அவர் எதையாவது சாதித்துவிட்டாரா என ஒரு சந்தேகம்.

இப்போதுதான் கூகிள் அங்கிள் இருக்கிறாரே, அவரிடம் கேட்டால் தகவலை கொட்டிவிடுவார் என்பதால் அவரிடமே கேட்டேன். அதில் ஒரு உருப்படியான சாதனை தகவல் கிடைத்தது. ஆனால் அதேசமயம் மேலும் பல தகவலை கவனிக்க நேரிட, இவர் சாதனை தலைவர் அல்ல, இவர் ஒரு நிலைவித்வான் தலைவர் என்பதும் புரிந்தது.